சுத்தமான குடிநீர் கேட்டு பிரவுன்ஸ்விக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் உள்ள மக்கள் தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலும் புளூம்பீல்ட் தமிழ் வித்தியாலயசாலைக்கு அருகிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று காலை 8.45 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான பிரவுன்ஸ்விக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் 235 குடும்பங்களைச் சேர்ந்த 1000 க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியிலும் புளூம்பீல்ட் தேசிய பாடசாலை 1000 மேற்பட்ட தரம் ஒன்று முதல் 13 வரை கல்வி பயிலும் மாணவர்கள் உள்ள பகுதிகளில் அத் தோட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கடந்த பல வருடங்களாக தமக்கு வழங்கும் குடிநீர் அசுத்தமானது எனவும் மழை காலத்தில் குடிநீர் பெறப்படும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலையில் அந்த நீரையே தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஆகையால் அங்கு உள்ள வாய்க்கால்கள் அனைத்தும் ஆழபடுத்த வேண்டும் எனவும் அங்கு அமைக்கபட்டுள்ள மதகை உயர்த்தி பாலமாக அமைத்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளனர்.




