வவுனியாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மின்தடை ஏற்ப்பட்டுள்ள நிலையில் மின்சார சபைக்கு பலமுறை அறிவித்தும் பலன் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியாவில் இன்று காலை முதல் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்ப்பட்டிருந்தது. சில மணிநேரங்களின் பின்னர் குறிப்பிட்ட சில பிரதேசசங்களுக்கி மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.
எனினும் மகாறம்பைக்குளம் மற்றும் தாண்டிக்குளத்தின் சில பகுதிகளில் காலை முதல் மின்தடை ஏற்ப்பட்டுள்ளதுடன் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை.
இது தொடர்பாக அப்பகுதி மக்களினால் இலங்கை மின்சார சபைக்கு பலமுறை அறிவிக்கப்பட்டும் அவர்கள் அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.