• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home கட்டுரைகள்

மறவோம் முள்ளிவாய்க்காலை..!!!

Sangeetha by Sangeetha
May 17, 2025
in கட்டுரைகள்
0
மறவோம் முள்ளிவாய்க்காலை..!!!
8
VIEWS
Share on FacebookShare on Twitter

மறவோம் முள்ளிவாய்க்காலை…

(இது ஒரு இனத்தின் குரல்…)

பதினைந்து வருடங்கள் உருண்டோடி விட்டது. ஆனாலும் கூட இன்றும் மறவாத வடுவாய் மனமெங்கும் வியாபித்திருக்கின்றது முள்ளிவாய்க்காலின் நினைவலைகள். நீதிக்கோரிய போராட்டத்தின் எஞ்சிய எச்சங்கள் தான் இன்று முள்ளிவாய்க்காலில் நினை

வேந்தலுக்காக நீதிவேண்டி நிற்கின்றன என சொல்லும் போதே மனம் கணக்கின்றது. எங்கும் அவலகுரலும், மரணஓலங்களும் கணீர் என காதுகளை கிழித்தது. பீறியடித்த இரத்தம் மூச்சுப்பிடித்து உயிர் காக்க ஓடிய எஞ்சிய மனித தசைகளிலும், மண்ணிலும் காய்ந்து வறண்டு போயிருந்தது. உயிரைக் காக்க தன் மானத்தை இழந்தும் கரைகடக்க

துணிந்தது மனம் பதறியழுத பச்சிளம் குழந்தைகள் முகம்கண்டு.

என்ன பயன்? காத்துவந்த உயிரையும், கணத்துபோயிருந்த மனங்களையும் கொத்துக் குண்டுகள் கொத்துக்கொத்தாக காவுகொண்டது. பார்க்கும் இடமெங்கும் பிணக்குவியல்களும், உருக்குலைந்த உடல்அவயங்களும், பீரங்கிப்புகைகளும், நச்சுமருந்து நாற்றமும் தான். மனம் சோர்வடைந்து, கால்கள் வலுவிழந்து, உடல்அவயம் சிதறி, நெஞ்சில் திராணியற்று வெள்ளைக்கொடி ஏந்தியவர்கள் மீது கூட தயக்கம் இன்றி பாய்ந்த தோட்டாக்கள் சில்லடையாக்கியது என் சிறுபான்மை இனத்தை, ஆட்லறி சத்தமும். ஆயுதப் போராட்டமும் இன்றும் மனங்களில் மாறாத வடுவாய்தான் இருக்கின்றது.

அறிந்தோம். எமக்கான விடியலும் வீர மண்ணுக்காய் வீழ்ந்து விட்டதென. இனியும் எமக்கு போக்கிடம் கிடையாது நிர்க்கதியாய் நிற்க வேண்டாம் என நினைத்து பல எஞ்சிய உயிர்கள் சரணடையவென எண்ணி. இதுதான் இறுதி கணம் எனஅறியாது முள்ளிவாய்க்காலின் அருகே வந்தடைந்தார்கள். சொற்ப நேரத்தில் காற்றோடு கலந்த புகையாகியது என் இனம். முள்ளிவாய்க்கால் குருதி வாய்க்காலாக மாறியது. உறவுகளை இழந்தும், உடைமைகளை இழந்தும், உடல் அவயங்களை இழந்தும், இதற்கும் மேலாக உயிரிலும் மேலான மானத்தையும் இழந்தும் இன்றும் மாண்டவர் நீதிக்காய் ஆண்டவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் இனம் நாங்கள்.

வருடங்கள் மாறாலாம். வரும் ஆட்சிகளும் மாறலாம் என்றும் மாறாதது எம் மனங்களில் நிறைந்திருக்கும் எம்மவர்களின் இறுதிக்குரல், தாய் நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் உயிரை துச்சமென எண்ணி மாண்டுபோன மாவீரர் வாழ்ந்துவீழ்ந்த அதே மண்ணில் இன்று நடக்கும் மறியாட்டங்கள் அனைத்தும் மனக்கவலைகளை தூண்டுகின்ற போதிலும், இறுதிக்கணம் வரை போராடிய என் ஈழமண்ணின் மைந்தர்களுக்காகவும் எம் கண்ணின் முன் நடந்தேறிய கொடிய துர்ச்சம்பவங்களுக்கும் நீதி கிடைக்கும் வரை யாவற்றையும் கடத்தி செல்வோம் எம் அடுத்த தலைமுறைக்கு.

ஒவ்வொரு ஆண்டும் கஞ்சி கொடுத்தும், தீச்சுடர் ஏற்றியும் நாங்கள் வெளிக்காட்டுவது வெறுமனே எங்கள் வலிகளை மட்டுமல்ல, நீதிக்காய் இன்னமும் காத்திருக்கும் எம் இனத்தின் அடையாளங்கள் நாங்கள் என்பதையே. பதினைந்து வருடம் என் இனத்தின் அழிவை அழிவென்றே கூற மறுக்கும் இலங்கை அரசும், ஏறெடுத்தும் பாராத உலக நாடுகளும் என் இனத்தின் விடியலையும் தன் கட்டப்பட்ட கண்களில் மறைத்து வைத்திருக்கும் நீதி தேவதையின் கண்களும் அடுத்த ஆண்டிலாவது என் இனத்தின் மீது கரிசணை காட்டட்டும்.

“இது ஒரு இனத்தின் குரல்.”

Related Posts

பலஸ்தீன் மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

பலஸ்தீன் மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

by User3
July 5, 2025
0

பலஸ்தீன மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது. பலஸ்தீன மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு...

மூத்த தமிழ் அரசியல்வாதியான வீரசிங்கம் ஆனந்தசங்கரி 93வது வயதில் இன்று  கால்பதிக்கின்றார்

மூத்த தமிழ் அரசியல்வாதியான வீரசிங்கம் ஆனந்தசங்கரி 93வது வயதில் இன்று கால்பதிக்கின்றார்

by Sangeetha
June 14, 2025
0

1933ம் ஆண்டு ஆனி மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்த ஆனந்தசங்கரி ஆரம்ப கல்வியை அச்சுவேலி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை பருத்தித்துறை காட்லி...

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து.

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து.

by Mathavi
June 10, 2025
0

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையும் வசதி படைத்தவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஆன்மீக கடமையாகும். வருடாவருடம் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பாதையில்...

மலையகத்தின் சிறந்த ஆளுமை – அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

மலையகத்தின் சிறந்த ஆளுமை – அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

by Sangeetha
May 26, 2025
0

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நாளில்தான் மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வுலகுக்கு  விடைகொடுத்திருந்தார். 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி