நேற்றைய தினம் (15) வியாழக்கிழமை சிவில் சமூக செயற்பாட்டாளரும் தழிழா ஊடக நிறுவனத்தின் நிறுவனரான தி.ஹிருசன் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் இனிமேல் தேசிய மக்கள் சக்தியினரின் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டேன் என கோப்பாய் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இக் கடிதத்தில் பின்வருமாறு காரணத்தின் அடிப்படையில் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் தேசியத்தின் இருப்பை கருதியும் எமது ஈழத் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதைகளை எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற எதிர்நோக்குடன் தனது சுய விருப்பில் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறே தற்போது பலர் ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் வரலாறு தெரியாமலும் அடிப்படைக் கோட்பாடுகள் தெரியாமலும் ஏதோ ஒரு விம்பத்தில் தம்மை தேசிய மக்கள் சக்தியில் இணைத்தனர். காலப்போக்கில் இவர்களின் உண்மை முகம் தெரிய கட்சியினை விட்டுவிட்டு வெளியே வருவதை காணக்கூடியதாக உள்ளது.

