அண்மையில் சுன்னாகத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில், சுன்னாகம் பாரம்பரிய றோட்டறிக் கழகத்தினால் அரையாண்டுக்கான றோட்டறி மின்னிதழ் வெளியிடப்பட்டது.
றோட்டறி முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் திரு.சுகந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இந்த மின்னிதழை வெளியிட்டு வைத்துள்ளார். இது சுன்னாகம் பாரம்பரிய றோட்டறிக் கழகத்தின் 100வது செயற்றிட்டமாக அமைந்துள்ளது.
சிபோயாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுன்னாகம் பாரம்பரிய றோட்டறிக் கழக அங்கத்தவர்கள், மாவட்ட உதவி ஆளுநர் திரு.தேவரூபன் என பலரும் கலந்துகொண்டனர்.


