• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஏ. சி. பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்..!

Thamil by Thamil
May 15, 2025
in இலங்கை செய்திகள்
0
ஏ. சி. பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்..!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராம மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு குடியேற்றத் தவறினால் குறித்த பகுதியில் மக்களோடு இறங்கி துப்பரவு செய்து ஏ.சி.பாம் கிராம மக்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.

இன்று (15) முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்படாத பூர்வீகத் தமிழ் கிராமங்களான ஏ.சி.பாம், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் களவிஜயம் மேற்கொண்டிருந்தார். அத்தோடு வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீமன்கமம் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களையும் இதன்போது அவர் பார்வையிட்டிருந்ததுடன், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களோடும் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தண்டுவான் கிராமத்திற்கு அண்மையிலுள்ள ஏ.சி பாம் என்னும் பூர்வீகத் தமிழ் கிராம் இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதிமக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டு குறித்த ஏ.சி.பாம் கிராம மக்களின் நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளேன்.

அந்தவகையில் அசாதாரண நிலமை காரணமாக கடந்த 1997 ஆம் ஆண்டு அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த சுமார் 46 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது வாழிடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் தற்போது வரை குறித்த ஏ.சிபாம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இருப்பினும் குறித்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் சிதைவடைந்த நிலையில் மக்கள் வாழ்ந்த வீடுகள் காணப்படுவதுடன், வேலிகளுக்காக நடப்பட்ட சீமைக்கிழுவை மரங்களும், மாமரம், தோடை உள்ளிட்ட பலன்தரும் மரங்கள் பலவும் காணப்படுகின்றன.

இத்தகைய சூழலில் கடந்த 2012 ஆம் ஆண்டு குறித்த ஏ.சி பாம் கிராமம் தண்டுவான் ஒதுக்கக்காட்டுப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வனவளத்திணைக்களம் குறித்த பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 1979 ஆம் ஆண்டு நிலஅளவைத் திணைக்களத்தால், குறித்த பகுதி அளவீடு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நிலஅளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட்டமைக்கான Top of PP66 என்னும் இலக்க வரைபடம் எம்மிடமுள்ளது. குறித்த காணிகள் தமிழ் மக்களுடையவை என்பதற்கு ஆதாரமாக, 1979 ஆம் ஆண்டு நிலஅளவை செய்யப்பட்ட வரைபடம் இருக்கும்போது, இப்பகுதி தண்டுவான் ஒதுக்கக்காடு என எவ்வாறு வர்த்தமானி வெளியிடமுடியும்.

ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முன்னர் நிலஅளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் உள்ள இடத்தை, இவ்வாறு ஒதுக்கக்காடு என்று வர்த்தமானி வெளியிடுவது சட்டமீறல் செயற்பாடாகும். தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்கள் இவ்வாறுதான் அபகரிப்புச் செய்யப்படுகின்றன. இந்நிலையில் தங்களுடைய பூர்வீக வாழிடத்தில் மீள்குடியேற்றுமாறு இக்கிராமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த மக்களை அவர்களது சொந்த இடமான ஏ.சி பாம் கிராமத்தில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியாக உரியவர்களை கேட்டுக் கொண்டு மாத்திரம் இருக்க முடியாது. இந்த இடங்களில் நாம் மக்களோடு இறங்கி, மக்களுடைய இடங்களைத் துப்பரவு செய்து, மக்களைக் குடியேற்றவேண்டிய நிலை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மக்களுடைய காணிகள் மக்களிடமே சேரவேண்டும். இவ்வாறு வனவளத்திணைக்களமோ அல்லது ஏனைய அரச திணைக்களங்களோ மக்களின் காணிகளை அபகரிக்கும் சட்டமீறல் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதேபோல் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாமல் காணப்படுகின்றது. அப்பகுதி மக்களும் தமது பகுதிகளையும் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்படாமலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை இந்த அரசாங்கம் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது தொடர்பிலே நாடாளுமன்றிலும் பேசுவதுடன், ஜனாதிபதி, பிரதமர், உரிய அமைச்சுக்களின் கவனத்திற்கும் கொண்டு வந்து இவ்வாறு மீள்குடியேற்றப்படாமலுள்ள பகுதிகளை மீள்குடியேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

அத்தோடு வீமன் கமம் பகுதியில் வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10 பேருக்குரிய 20 ஏக்கர் விவசாயக் காணிகளையும் விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்” என்றார்.

Related Posts

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

கண்டி, உடுதும்பர - மீமுரே பகுதியில் மகிழுந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்...

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

by Thamil
July 19, 2025
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை...

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

by Thamil
July 19, 2025
0

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையில்...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

by Thamil
July 19, 2025
0

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

by Thamil
July 19, 2025
0

14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும்...

வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!

வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தால் கிண்ணியா தோணா கரையோரத்தில் உள்ள வியாபார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அகற்றக்...

இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!

இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேக ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும்" என...

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!

by Thamil
July 19, 2025
0

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக திட்ட வரைவு ஒன்றை தயாரித்து எதிர்வருகின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக திருகோணமலை மாவட்ட...

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது"என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

by Thamil
July 19, 2025
0

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காணித் தகராறில் உறவினர்களுக்கிடையிலான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி