வரலாற்று சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் நந்தவன உற்சவம் நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அம்பாள், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ஆகிய பரிவார மூர்த்திகளுடன் வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளியாக உள் வீதியூடாக வலம் வந்து, பின்னர் வெளி வீதியூடாக நந்தவன பீடத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச் சென்றனர்.
ADVERTISEMENT



