திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் அமைக்கப்பட்ட உள்ள வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்த குமார களத்துக்கு சென்று பார்வையிட்டார்.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் நெறியாழ்கையின் கீழ் குறித்த பயனாளர்களை பார்வையிட்டார். தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் பொற்கேணி கிராம சேவகர் பிரிவு, மீரா நகர், முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளில் அமையவுள்ள குறித்த வீட்டு திட்ட பயனாளிகளையே இவ்வாறு பார்வையிட்டார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





