• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்; நாமல் எம்.பி. போர்க்கொடி.!

Mathavi by Mathavi
May 14, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்; நாமல் எம்.பி. போர்க்கொடி.!
Share on FacebookShare on Twitter

“கனடா ஒரு தமிழினப் படு கொலை நினைவுச் சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயற்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடும். இந்தச் செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

“இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப் படு கொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்குக் கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.” – என்றும் நாமல் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

கடனாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப்பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி நாமல் ராஜபக்ஷ எம்.பி. தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

ADVERTISEMENT

அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கை இராணுவம், விடுதலைப்புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுத்த மோதலில் எந்த இனப் படு கொலையும் சர்வதேச சட்டத்துக்கமைய நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாத நிலையில், கனடா ஒரு தமிழினப் படு கொலை நினைவுச் சின்னத்தை நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது.

தமிழினப் படு கொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படுவது, கனேடிய அரசால் அரசியல் ரீதியாக இயக்கப்படும் ஒரு நடவடிக்கையாகத் தெரிகின்றது. இது நீண்ட காலமாகத் தமிழ் புலம்பெயர்ந்தோருக்குள் உள்ள சில பிரிவுகளால் முன்னெக்கப்படுகின்றது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயற்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன.

1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவைக் கொன்றதன் மூலம் வன்முறைச் செயற்பாடுகளைத் தொடங்கிய விடுதலைப்புலிகள், ஏராளமான கொடூரமான செயல்களைச் செய்தனர். இந்தப் பயங்கரவாதக் குழு ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்து, அவர்களை அவர்களது குடும்பங்களிலிருந்து பிரித்து, பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. பல தசாப்த கால வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டபூர்வமான இராணுவ நடவடிக்கையில் இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளை ஒழித்தன.

விடுதலைப் புலிகள் மற்றும் காலிஸ்தான் போராளிகள் போன்ற பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரித்த கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகின்றது. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடும். இந்தச் செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

இலங்கை அரசு கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்துக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப் படு கொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்குக் கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.

இந்தப் பிரச்சினையில் இலங்கை அரசு தீர்க்கமாகச் செயற்படத் தவறுமாயின் அது ஆயுதப்படைகள், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களுக்கு ஒரு அவமானமாக அமையும். இலங்கையின் தேசிய நலன்களைப் பாதிக்கும் முக்கியமான விடயங்களைத் திறம்படக் கையாள அரசின் இயலாமையையும் இது எடுத்துக்காட்டுகின்றது.” – என்றுள்ளது.

Related Posts

திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

by Thamil
June 14, 2025
0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி திருக்கோவில் கிளையின் முன்மொழிவுக்கு...

ஆளுநர் – கடற்படைத் தளபதி சந்திப்பு..!

ஆளுநர் – கடற்படைத் தளபதி சந்திப்பு..!

by Thamil
June 14, 2025
0

கடற்படையின் 28 வது கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2025.05.28 அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை...

ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

by Sangeetha
June 14, 2025
0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா,...

மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கப்  போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்

மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கப் போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்

by Sangeetha
June 14, 2025
0

கடற்படை முகாம் அமைக்கப் பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப் படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம்...

ஏழைக்  குடும்பத்திற்கு  வீடு கட்டிக் கொடுத்தல்

ஏழைக் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தல்

by Sangeetha
June 14, 2025
0

வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் வீடு தேவையுடைய குடும்பத்திற்கான வீட்டுக்கு இன்று 14/06/2025 கல் வைப்பு நடைபெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ் கிராம உத்தியோகத்தர்...

மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

by Sangeetha
June 14, 2025
0

தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 543 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான...

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

by Sangeetha
June 14, 2025
0

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். அசாதாரண காலநிலை காரணமாக...

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

by Sangeetha
June 14, 2025
0

கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...

மக்களை ஏமாற்ற வேண்டாம்; வாக்குறுதியளித்த முறைமை மாற்றம் எங்கே?- சஜித்

மக்களை ஏமாற்ற வேண்டாம்; வாக்குறுதியளித்த முறைமை மாற்றம் எங்கே?- சஜித்

by Sangeetha
June 14, 2025
0

"தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்று வரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. ஜனாதிபதிக்கோ...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி