நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் வட்டார வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், அண்மையில் முக்கொம்பன் பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
கட்சியின் நல்லூர் வட்டார வேட்பாளர் ஐயம்பிள்ளை லோகநாதன் தலைமையில் நடைபெற்ற மேற்பட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் வட்டார வேட்பாளர் குணலக்சுமி குலவீரசிங்கம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
குறித்த வட்டாரத்தின் வேட்பாளர் சரஸ்வதி விஜயகுமார் உட்பட, கட்சியின் பெருமளவான ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



