தமிழ் ஆசிரியராகவும், வலிகாமம் கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகவும் 33ஆண்டுகள் அரசபணியாற்றி ஓய்வு பெற்ற சுகுணராணி சண்முகேந்திரன் வெண்கரம் அமைப்பின் இயக்குநராக பதவியேற்றார்.
தேவை உடைய கிராமங்களில் சமூக மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி சமூக பொருத்தப்படான பிரஜைகளை உருவாக்கும் இலக்குடன் கல்வி, தொழில் வழிகாட்டல் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைப்பின் செயற்பாடுகளை செயற்படுத்திய இவர் பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு கணிசமான மாணவர்களை உருவாக்கியவர்.
இந்நிகழ்வில் வெண்கரம் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து சூழலை நேசிக்கும் முன்மாதிரியாக மரக்கன்றுகளை அவருக்கு பரிசாக வழங்கி கெளரவித்தனர்.


