தேசிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடி பிரசாரக் கூட்டம் மஸ்கெலியா நகரில் உள்ள தனியார் வாகன தரிப்பிடத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு ஒருங்கிணைப்பு தலைவருமான திரு.மஞ்சுல சுரவீர தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலைச் செல்வி மற்றும் மஸ்கெலியா பகுதி அமைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பெருந்தோட்ட நிறுவன நிர்வாக அதிகாரியாக கடமையாற்றும் திரு.சத்தியமூர்த்தி உட்பட மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கடந்த 76 ஆண்டு காலம் நாட்டையும், மாகாண சபைகளையும், பிரதேச, நகர, மாநகர, சபைகளையும் மாறி, மாறி ஆண்ட அரசியல் கட்சிகள் சூறையாடி விட்டன. இம்முறை நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் 159 ஆசனங்கள் வழங்கிய நீங்கள் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் எமது பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என அங்கு உரையாற்றிய மஸ்கெலியா பகுதி அமைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பெருந்தோட்ட நிறுவன நிர்வாக அதிகாரியாக கடமையாற்றும் திரு.சத்தியமூர்த்தி கலந்து கொண்ட மக்களிடம் கேட்டு கொண்டனர்.
நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உருப்பினர் மஞ்சுலசுரவீர நாடாளுமன்ற உறுப்பினர் கலைச் செல்வி மற்றும் சத்திய மூர்த்தி ஆகியோர் உரையாற்றினார்.
மேலும் சத்தியமூர்த்தி அவர்கள் உரையாற்றுகையில்,
நான் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் மக்களால் என்னிடத்தில் தொடுக்கப்படும் ஒரே வினா ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் வந்த பிறகு என்ன மாற்றம் நடந்திருக்கின்றது என்ற கேள்வியே இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டுமென்றால் இந்த 76 ஆண்டு காலமாக எமக்கு நடந்த மாற்றங்கள் என்ன என்பதை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
முதலில் நாம் பாடசாலைகளை எடுத்துக்கொள்வோம் நம் மலையகத்தை பொறுத்தவரையில் இரு வகையான பாடசாலைகள் உண்டு. ஒன்று வசதி கூடிய பாடசாலை இன்னொன்று வசதி குறைந்த பாடசாலை. இங்கு வசதி கூடிய பாடசாலை பற்றி யோசிக்க வேண்டியதில்லை. ஆனால் வசதி குறைந்த பாடசாலைகளை பற்றி பார்த்தால் கட்டிட வசதி பற்றாக்குறை தான் மிக முக்கிய பிரதான பிரச்சினையாக உள்ளது. உதாரணமாக அண்மையில் நான் கங்கேவத்த பாடசாலைக்கு சென்றேன். அங்கு தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை இல்லை. ஒரு தகரத்திலான தற்காலிக அறையில் தான் கல்வி பயிலுகின்றனர். மழை காலம் வந்தால் அவர்களுக்கான வகுப்பு நடைபெறாது. விடுமுறை வழங்கி விடுகின்றனர். இது மட்டுமா இன்னும் அநேக பாடசாலைகளில் கூரை பிரச்சினை, மலசலகூட பிரச்சினை, குடிநீர் பிரச்சினை இன்னும் ஏராளமான பிரச்சினைகள் பெண் பிள்ளைகளுக்கு ஒழுங்கான மலசலகூடம் இல்லாமையால் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதுடன் நோய்வாய்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவைகள்தான் இத்தனை காலமாக நமக்கு கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்.
சரி இதிலிருந்து விடுபட எம் மக்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம் 5 ம் ஆண்டு புலமைபரிசில். இதில் சித்தியடைந்தால் வசதி குறைந்த பாடசாலையில் இருந்து வசதி கூடிய பாடசாலைக்கு செல்லமுடியும் என்ற ஆசையில் மாணவர்கள் தரம் 3 இல் இருந்தே அதற்கு தயாராகுகின்றார்கள். எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாலும் எல்லோராலும் சித்தி அடைந்து வெளிப் பாடசாலைக்கு செல்ல முடியுமா? எவ்வளவு பாவம் அந்த பெற்றோர்களும், மாணவர்களும் ஏன் இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு அரசியல் தலைவர்கள் இருந்தும் எம்மால் அனைத்து பாடசாலைகளிலும் ஒரே மாதிரியான வசதிகளை செய்து கொள்ள முடியவில்லை. இது போன்ற பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக நிரந்தர தீர்விற்காக மலையகத்திற்கு மாத்திரம் 866 மில்லியன் பெரிய தொகையினை ஜனாதிபதி அவர்கள் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கியுள்ளார். இதுதானே எமக்கு தேவையான மாற்றம் இது மாற்றம் இல்லையா?
அது மட்டுமல்லாமல் தோட்டப் பகுதிகளில் சீரான பாதைகள் இல்லை. இதையாவது கடந்த கால ஆட்சியாளர்கள் செய்து கொடுத்தார்களா? ஆனால் அவர்கள் வீடுகளுக்கு செல்லும் பாதைகளை கார்பட் பாதைகளாக மாற்றிக்கொண்டுள்ளார்கள் இது தான் அவர்கள் செய்த மாற்றங்கள் அதனால் இதனை மாற்றி அமைக்கவே கிராமிய மட்ட வீதிகளை புனரமைப்பதற்காக 35,500 கோடி பணத்தையும், பாலங்கள் புனரமைப்பதத்திற்காக 2,200 கோடி பணத்தையும் ஜனாதிபதி அவர்கள் வரவு செலவு திட்டத்த்தில் ஒதுக்கியுள்ளார். இதுதானே எமக்கு தேவையான மாற்றம் இது மாற்றம் இல்லையா? என்று மக்களிடம் கேள்விகளை எழுப்பினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பிரன்சுவிக் எமலினா தோட்ட மாணவி ஒருவருக்கு நடந்த மிகவும் வருத்தத்திற்கூறிய ஒரு சம்பவத்தையும் பதிவு செய்தார். அந்த மாணவிக்கு திடீர் சுகயீனத்தால் அவர் மருந்தை பெற்றுக்கொள்ள மஸ்கெலியா ஆதார வைத்தியசாலைக்கு சென்றுருக்கின்றார். அங்கு அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் ஒரு தனியார் இரத்தப் பரிசோதனை நிலையத்தில் பணம் கொடுத்து பரிசோதனை செய்திருக்கின்றார். அவருக்கு சக்கரை நோய் இருப்பதாக அந்த பரிசோதனையின் படி முடிவை எடுத்து அவருக்கு சக்கரை நோயாளருக்கான வைத்தியத்தை செய்திருக்கின்றார்கள். அந்த பரிசோதனையின் உண்மை தன்மையை அறிய மீண்டும் அதே பரிசோதனையை செய்ய பணம் இல்லாமையினால் அதை சரியான பரிசோதனையாக நினைத்து தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்திருகின்றது. அன்று அவர் சக்கரை நோயாளி போட்டுக்கொள்ள வேண்டிய ஊசியை கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. சிறிது காலம் சென்றவுடன் தான் அவரின் அந்த பரிசோதனை பிழையானது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவி ஒரு சக்கரை நோயாளியே அல்ல. இந்த மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் ஒரு இரத்த பரிசோதகர் இல்லாமல் செய்ததினால் அந்த மாணவி இன்று எவ்வளவு பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றார். இருந்தவரை இல்லாமல் செய்தது அவர்கள் செய்த மாற்றம் இது போன்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத மாற்றங்களை செய்திருக்கின்றார்கள். நம் மூத்த அரசியல் ஜாம்பவான்கள் ஆனால் திசைகாட்டியின் மாற்றம் என்பது அவர்கள் இல்லாமல் செய்த அனைத்து தேவையான விடயங்களையும் திருப்பி செய்வதுதான் இதற்காக வைத்தியசாலை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக வரலாற்றில் முதல் தடவையாக பெரிய தொகையான 60,400 கோடி தொகையினை ஒதுக்கியுள்ளது. இது மட்டுமில்லாமல் கர்ப்பிணித் தாய்மார்கள், சிசு மரண வீதத்தினை குறைக்க மற்றும் போசணை குறைந்த தாய்மார்கள், குழந்தைகளுக்கான போசணை திட்டத்திற்காக 750 கோடி நிதியை எமது இன்றைய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது இவைகள் மாற்றம் இல்லையா?
இதுமட்டுமல்ல நான் பெருமையாக கூறிக்கொள்கின்றேன் மலையக தோட்டங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் என முதன் முறையாக மலையக தமிழர்களுகாகவே 4,267 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. எமது திசைகாட்டி அரசாங்கம் இவ்வளவு பெரிய நிதியை கையாண்டு மக்களுக்கான சேவைகளை சென்றடைய ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் ஒவ்வொரு வட்டாரங்களிலும் இருந்தும் உறுப்பினர்கள் தேவை அதற்காக நாம் அவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி எமது வாக்குகளை அளிப்பதன் மூலமாக அவர்களை வெற்றிபெற செய்து எமக்கான வேலைத்திட்டங்களுக்கான நிதியை நாம் முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே இவர்கள் சேமிக்கும் இந்த பணம் எமக்கு வந்தடையும் ஒரு இடம் தான் பிரதேச சபை. ஆகவே இந்த பணம் மூலமாக எமக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை சரியான முறையில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் முன்பை போல் இல்லாமல் ஊழலற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் தேவை. எனவே எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்களை ஆதரித்து அவர்களை அமோக வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது பரம்பரை செய்த தவறுகளில் இருந்து மீண்டெழுந்து எமது எதிர் கால சந்ததியினரின் சுபீட்சமான வாழ்க்கைக்கு வழி அமைப்போம் என்று தெரிவித்தார்.