வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுளளதுடன், 20 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் லொறி ஒன்றை வழி மறித்து சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது.
குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த பொலிசார் 20 மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு பொண்டு சென்றனா. குறித்த மாடுகள் மல்லாவி பகுதியில் இருந்து குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவித்த பொலிசார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

