யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி (வயது 20) என்ற, 4 மாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் (20) குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் அவரை தாக்கியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
ADVERTISEMENT
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.