ஹட்டன் ரயில் நிலையம் உட்பட சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு தரிசிக்க சென்ற 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT
சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.