மொனராகலை சிரிகல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது சிரிகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.