தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இயக்குநர் உட்பட ஒன்பது மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (SSP) மற்றும் 28 பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றத்துடன் புதிய பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.பி. ஏ.எச்.என். அசங்க, ஆர்.ஜி.ஏ.பி.குணதிலகே, கே. கே.கே.குணசேகர, ஏ.ஏ.ஆர்.பி.அமரசிங்க, என்.ஆர்.எச்.பி.குணசேகர, என்.என்.எஸ்.மெண்டிஸ், டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, எம்.எம்.ஏ.பி. மஹாகிரில்ல மற்றும் எம்.யு.பி. கலுபஹான ஆகியோரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணையத்தின் ஒப்புதலின்படி, இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.









