இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளான். இதன்போது சுன்னாகம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த என்.ஆர்த்வீகன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுவனின் தந்தை அருவி வெட்டும் இயந்திரத்தை உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து வீட்டுக்கு முன்னே நிறுத்தி வைத்துள்ளார்.
இதன்போது சிறுவன் உழவு இயந்திரத்துடன் விளையாடினான். இந்நிலையில் உழவு இயந்திரம் அசைந்தபோது குறித்த சிறுவன் கீழே விழுந்தவேளை சிறுவனின் மீது உழவு இயந்திரம் ஏறியது. இந்நிலையில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.