1360 மில்லி கிராம் கேரள கஞ்சா மற்றும் 2.6 அங்குலம் நீளம் கொண்ட கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் தியகலை பகுதியில் இடம்பெற்றது.
ஹட்டன் பொலிஸார் வீதித் தடை இட்டு சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை தந்த பேருந்து ஒற்றைச் சோதனையிட்டபோது பௌத்த பிக்குவிடமிருந்து 1360 மில்லி கிராம் கேரள கஞ்சாவும், கஞ்சா சுருட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைது செய்யபட்டவர் 27 வயதுடைய உபநந்த ஸ்ரீ போதிருக்ஷா ராமய கிரிமெட்டிய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் இன்று காலை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.