வங்கக்கடலில் இன்று காலை 6.10 அளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 340 கிலோமீற்றர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.