• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போல் செயற்படவே கூடாது.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 21, 2025
in இலங்கை செய்திகள்.
0
தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போல் செயற்படவே கூடாது.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

“தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரிய வகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கான தேவைப்பாடுகளை கோரவேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் தனித்தனியே சந்தித்து இன்று வெள்ளிக்கிழமை காலை கலந்துரையாடினர்.

கொடுப்பனவுகளை அதிகரித்தல், இடமாற்றங்கள் தொடர்பில் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளாலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்போது கொடுப்பனவு அதிகரிப்பு மீளாய்வுக்கு இணக்கமும் தெரிவிக்கப்பட்டது. இடமாற்றங்களும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் ஆராய்ந்து முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பாராட்டினார். அத்துடன் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சிறப்பாகச் செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான மெச்சுரை சான்றிதழ் வழங்கவும் ஆளுநர் இணக்கம் தெரிவித்தார்.

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தமது திருத்தப்பட்ட சேவைப்பிரமாணக் குறிப்பு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தது. மேலும் மூன்றிலொரு பகுதி ஆளணி வெற்றிடமாகவுள்ள நிலையிலும், தம்மிடமிருந்து நூறு சதவீத சேவை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இது சாத்தியமில்லாத விடயம் எனவும் தெரிவித்தனர்.

வதிவிடப் பயிற்சிநெறி நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். ஆளணி வெற்றிடத்துக்கு சில மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதுடன் வதிவிடப் பயிற்சிநெறியை தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் இணக்கம் காணப்பட்டது.

கூட்டுறவில் ஒரு காலத்தில் வடக்கு மாகாணம் கொடிகட்டிப் பறந்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், தற்போது அது பின்னடைவான நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

அதை உயர்த்தும் பொறுப்பு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உண்டு. சமூகப்பொறுப்புடன் செயலாற்றவேண்டும். அதேபோல இன்னும் வினைத்திறனாகச் செயற்பட எவ்வாறான சட்டத்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பதையும் பரிந்துரைக்குமாறு ஆளுநர் இதன்போது கோரினார்.

வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்தால் கோரப்பட்ட தளபாட வசதிகள், காகிதாதிகள் என்பனவற்றை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

மேலும் களத்தரிசிப்பு கொடுப்பனவு தொடர்பில் நிலவும் முரண்பாடுகளை சீர்செய்யவும் உறுதியளிக்கப்பட்டது.

தேசியமட்ட நிலைப்பாட்டுக்கு அமைவாக ஆசிரிய வளவாளர்கள் என நியமிப்பதை விடுத்து பதில் ஆசிரிய ஆலோசகர்கள் என்ற பதவி நிலைக்கு நியமிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இணக்கம் வெளியிட்டார்.

இந்தச் சந்திப்புக்களில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலர் ஆ.சிறி, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலர் பொ.வாகீசன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் – நிர்வாகம் திருமதி எ.அன்ரன் யோகநாயகம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் – பொறியியல் சேவை எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

by Bharathy
May 16, 2026
0

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே...

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

by Mathavi
May 15, 2026
0

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி - 2026 நடைபெறவுள்ளது. காலம் : 28.07.2026இடம் : சிவகாமி...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 15, 2026
0

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச...

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

by Mathavi
May 15, 2026
0

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென...

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

by Mathavi
May 15, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று...

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

by Mathavi
May 15, 2026
0

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

by Mathavi
May 15, 2026
0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 15, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

by Mathavi
May 15, 2026
0

நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி