கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சமூக ரீதியான, சுற்றாடல் ரீதியான மற்றும் ஒழுக்க விழுமிய ரீதியிலான “கிளீன் ஸ்ரீலங்கா” எனும் வேலைத்திட்டத்திற்கமைவாக 2025.02.18ம் திகதி அதிபர் ஏ. ஜி முகமது றிசாதின் தலைமையில் இத்திட்டம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது செயல்களை முன்னெடுப்போம், பொறுப்புடன் செயற்படுவோம், சூழல்நேய பாடசாலையிலிருந்து எதிர்கால பசுமைத் தலைவர்களை உருவாக்குவோம். பல்வகைமையை மதிக்கின்ற மகிழ்ச்சிக்குரிய வகுப்பறை, செயல்களில் நியாயத்தன்மை மற்றும் ஒவ்வொரு தீர்மானத்திலும் வெளிப்படைத் தன்மை மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் எனும் தொனிப்பொருள்களுக்கேற்ப அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இணைந்து சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.


