• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முல்லை மாவட்ட சுகாதாரத்துறை தேவைகளைப் பூர்த்திசெய்க; ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

Mathavi by Mathavi
February 19, 2025
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
முல்லை மாவட்ட சுகாதாரத்துறை தேவைகளைப் பூர்த்திசெய்க; ரவிகரன் எம்.பி கோரிக்கை.!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் காணப்படும் பல வைத்தியசாலைளிலும் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் முன்வைப்புக்களை செய்ததுடன், குறித்த தேவைப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மருந்துக்கலவையாளர்களின் ஆளணிப் பற்றாக்குறை, வைத்தியாசாலைகளில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்தல், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர்களின் தேவைப்பாடுகள், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்திய நிபுணர் மற்றும், துணை மருத்துவப் பணியாளர் தேவைப்பாடுகள், அளம்பில் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டித் தேவைப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது முன்வைப்புக்களைச் செய்துள்ளார்.

முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் குறித்தே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (18.02.2025) இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் காணப்படும் மருந்துக் கலவையாளர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

மருந்துக் கலவையாளர்கள் சுகாதார சேவையில் முக்கிய இடம் வகிக்கின்றார்கள். மருந்து வழங்கல், சத்திரசிகிச்சைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் என்பவற்றின் பொருட்பதிவேட்டைப் பேணல், மருந்துக் கையிருப்பைப் பேணல், மருந்துக் களஞ்சியத்தைப் பேணல் என்பன அவர்களின் முக்கிய பணியாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்துக் கலவையாளர் ஆளணி 34 ஆகும். ஆயினும் தற்போது உள்ள மருந்துக் கலவையாளர்களின் எண்ணிக்கை 13 மட்டுமே ஆகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மருந்துக் கலவையாளர்களுக்கான ஆட்சேர்ப்பு பயிற்சி நெறிகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை.

எமது சில மருத்துவமனைகளின் மருந்துக் கலவையாளர்களின் பணியானது மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில் வேறு ஊழியர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிலையானது நோயாளர் பாதுகாப்பு மற்றும் தரம் என்பவற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே மருந்துக் கலவையாளர் பயிற்சி நெறியை விரைவாக ஆரம்பித்து ஓர் அணியினரைப் பயிற்றுவித்து வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு மருந்துக் கலவையாளர் வெற்றிடங்களுக்கு மருந்தாளர் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்தியசாலைகளின் ஆளணி மீளாய்வு செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறைகள் நிரப்பப்படவேண்டிய தேவைகளும் காணப்படுகின்றன.

காலத்துக்குக் காலம் தேவைகளுக்கும் புறநிலை மாற்றங்களுக்கும் அமைவாக சுகாதார சேவையின் ஆளணியினர் விரிவாக்கப்படல் வேண்டும்.

தீர்க்கமான ஓர் ஆளணி விரிவாக்கமானது இறுதியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக நடைபெற்ற அவ் ஆளணி விரிவாக்கத்தில் கூட தரமுயர்த்தப்பட்ட ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் என்பவற்றின் ஆளணியினர் அதற்கேற்ற வகையில் விரிவாக்கப்படவில்லை. குறிப்பாக தரமுயர்த்தப்பட்ட ஆதார மருத்துவமனைகள் இன்னமும் பிரதேச மருத்துவமனைகளின் ஆளணியினருடனேயே இயங்குகின்றது. எனவே தரமுயர்த்தப்பட்ட ஆதார வைத்தியசாலை மட்டத்துக்கான சேவைகளை வழங்க ஆளணிகளை பூர்த்திசெய்துதருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தக் குறைபாடு காரணமாக மருத்துவ நிருவாகத்துக்கும் பொதுமக்களுக்குமான முரண் நிலைகள் உருவாகுவதுடன் நோயாளர் பராமரிப்பு சேவை வழங்கலும் பாதிப்படைகின்றது.
ஆளணி விரிவாக்கத்திற்கான தொடக்க முயற்சிகள் தற்போது மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

எனவே ஆளணி விரிவாக்க நடவடிக்கைகளை விரைவாக முழுமைப்படுத்துவதுடன் விரிவாக்கப்பட்ட ஆளணிக்குரிய பணியமர்த்தல்களை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஆளணி விரிவாக்கத்தின் போது, அதற்கான நியமங்களை வடிவமைக்கும் போது, மருத்துவமனைகளின் புவியியல் நிலைகள் மற்றும் உள்ளக அமைவுகள் என்பனவற்றையும் கருத்திற் கொள்ளவேண்டும்.

அதேவேளை புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர்களின் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையானது கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ளதுடன் இம்மாவட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகைக்கான சேவைகளை வழங்கி வருகின்றது.

ஆயினும் இம்மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களின் சேவைகள் மற்றும் முக்கிய துணை மருத்துவப் பணிகளான மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோர் இல்லாத நிலையே உள்ளது.

எனவே பொது வைத்திய நிபுணர் ஒருவரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பவியலாளர், எக்சு கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன்.

இந் நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் மற்றும், துணை மருத்துவப் பணியாளர் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

மாங்குளம் ஆதார மருத்துவமனையானது ஓர் (A)தரத்திலான ஆதார மருத்துவமனையாகும். மாகாணத்திற்குரிய புணர்வாழ்வு மருத்துவ அலகினையும் இது கொண்டுள்ளது.

ஏ9 நெடுஞ்சாலையில் கேந்திர முக்கியமான இடத்தில் இது அமைந்துள்ளதால் இம் மருத்துவமனை முக்கியத்துவம் பெறுகின்றது. அண்மைய நெதர்லாந்து அரசின் VAMED செயற்றிட்டத்தின் மூலம் இதன் சேவைப்பரப்பு இன்னும் கணிசமாக விரிவடைந்து நோயாளர் சேவை இடம்பெறுகின்றது.

ஓர் (A)தரத்திலான ஆதார மருத்துவமனையாக இருப்பதால், அனைத்து முக்கிய மருத்துவ நிபுணத்துவ சேவைப் பிரிவுகளும், துணை மருத்தவ சேவைகளும் இங்கு அமைதல் வேண்டும்.

ஆனால் இந்த ஆதார மருத்துவமனையானது மகப்பேற்று மருத்துவர், குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மூட்டு வாத சிகிச்சை நிபுணர் மற்றும் முக்கிய துணை மருத்துவப் பணிகளான இயன் மருத்துவ சிகிச்சையாளர், மற்றும் X கதிர் படப்பிடிப்பாளர் சேவை என்பன இல்லாத நிலையிலேயே தற்போது இயங்கி வருகின்றது.

எனவே மகப்பேற்று மருத்துவர், குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மூட்டுவாத சிகிச்சை நிபுணர் ஆகியோரின் நியமனத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு முக்கிய துணை மருத்துவப் பணிகளான இயன் மருத்துவ சிகிச்சையாளர், X கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோரின் நியமனத்துக்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் அளம்பில் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டி மற்றும் மணலாறு சுகாதார வைத்திய அதிகாரிக்கான வாகன தேவைப்பாடுளும் காணப்படுகின்றன.

அளம்பில் பிரதேச மருத்துவமனை ஒரு நோயாளர் காவுவண்டி இல்லாமலேயே இயங்கி வருகின்றது. இது முல்லைத்தீவில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

இம் மருத்துவமனைக்கான நோயாளர் காவுவண்டிச் சேவைகள் இதர மருத்துவமனைகளான கொக்கிளார் பிரதேச மருத்துவமனை (22கி.மீ.), சம்பத்துநவர பிரதேச மருத்துவமனை (35 கி.மீ.) மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் அளம்பில் மற்றும் மணலாறு ஆகிய இரண்டு சேவை இடங்களும் மிகக்குறைவான பொதுப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இடங்களாகும்.

ஆகவே அளம்பில் பிரதேச மருத்துவமனைக்குரிய நோயாளர் காவு வண்டி ஒன்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Related Posts

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 21, 2026
0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரளுகஹபிட்டிய பகுதியில் உள்ள களு கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை (20) களு...

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று...

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

by Mathavi
May 21, 2026
0

போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின்...

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

by Mathavi
May 21, 2026
0

மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (20) குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின்...

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
May 21, 2026
0

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட...

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (21)...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி