இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்ததுவன பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த உந்துருளி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்ததுவன பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த உந்துருளி மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசாலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


