பாரவூர்தியில் இருந்து மரக்குற்றிகள் வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வஸ்கடுவ, கபுஹேன பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
சம்பவத்தன்று, உயிரிழந்த நபர் பாரவூர்தியிலிருந்து மரக்குற்றிகளை இறக்கிக்கொண்டிருந்த போது பாரவூர்தியில் இருந்து இரண்டு மரக்குற்றிகள் குறித்த நபரின் மீது வீழ்ந்துள்ளதாகவும், இதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.