வவுனியாவில் மத ஒற்றுமையை வெளிப்படுத்தி 77 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிப்போம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட சர்வ மத மனிதநேய பேரவையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று (04.02) இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மூவினங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசில் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.



