இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.
யாழ். கோட்டையை அண்டிய பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற ‘கிளீன் ஸ்ரீலங்கா’ நிகழ்வில், இலங்கை சாரணர் சங்கத்தின் ஆணையாளர் Janprith Fernando, 512 ஆவது படைப்பிரிவு கட்டளைத் தளபதி கேணல் எல்.ஏ.ஆர். குணரத்ன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கலிங்க ஜெயசிங்க, யாழ். மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






