தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (04) இடம் பெற்றது.
” தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்” எனும் தொனிப் பொருளின் கீழ் கொண்டாடப்பட்டு வரும் சுதந்திர தின நிகழ்வுக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதன் பின்னர், யுத்தத்தின் போது உயிர் நீத்த படை வீரர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தனால் தேசிய சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த பிரதேச செயலக வளாகத்தில் மரநடுகையும் இடம் பெற்றது.
இதில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



