இலங்கையின் 77 வது சுதந்திர தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (4) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன் தேசியக் கொடியினை அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார்.
சர்வ மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இடம் பெற்ற, இந்த நிகழ்வில், இலங்கையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்லின கலை கலாச்சார நிகழ்வுகளும், அதனை தாெடர்ந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரிய உடையுடன், மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றது. இதன் பாேது மாவட்ட செயலக உத்தியாேகத்தர்களால் தமிழ் சிங்கள மாெழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியாேகத்தர்கள் கலாசார ஆடகைளுடன் நிகழ்வில் கலந்து காெண்டிருந்தனர்.








