அமரத்துவமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சோ.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
யாழ். மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு நேற்று சனிக்கிழமை பிற்பகல் சென்று அன்னாரின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஆளுநர், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களைக் கூறினார்.

