யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது..
யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முறையாகத் தலையிடத் தவறியதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த ஐந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.