திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறை பதில் அமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் கேமச்சந்திர தலைமையில் இடம்பெற்றது.
இதில் வெருகல் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறைபாடுகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. குறிப்பாக மனித யானை மோதல், தொல்பொருள் திணைக்களம் ஊடான மக்கள் காணி அபகரிப்பு என பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் மொழி இனமத வேறுபாடின்றி தொல்பொருள் பிரச்சினையும் இங்கு இருக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் எடுத்துரைத்தார்.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப் உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



