• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா!

Bharathy by Bharathy
January 13, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா!
Share on FacebookShare on Twitter

பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா. அவ் விழா எமக்குணர்த்தும் வழியில் பயணிப்போம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (13.01.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையை ஊன்றி வளர்த்த ஈழத் தமிழர்களாகிய எமக்கு அரசியல் தீர்வுக்கான வழிகள் எல்லாம் தேசிய மக்கள் சக்தி எனும் மக்கள் விடுதலை முன்னணியினரின் தற்போதைய ஆட்சியின் காலத்தில் நிரந்தரமாகவே ஏக்கிய ராஜ்ஜிய (ஒற்றை ஆட்சி)தால் அடைக்கப்பட்டு விடும் அறிகுறியே தென்படுகின்றன.

இதற்கு தமிழர் தேசியம் பேசி வாக்கு அரசியல் (தேர்தல் அரசியல்) செய்யும் ஒரு சில கட்சிகளும், அவர்களின் காவடி குழுவினரும் துணை நிற்பது தமிழர்களின் அரசியலுக்கு எதிரான சாபக்கேடு எனக் குறிப்பிடுவதோடு அவற்றை எல்லாம் தகர்த்து தமிழர் தேசியம் காக்கும் தமிழர் வருட தைத்திருநாளில் காலடி வைத்து தமிழர் தாயக அரசியலை பலப்படுத்தும் சக்தியாக எம் மண்ணில் பொங்கி மகிழ, அரசியல் எழுச்சி கொள்ள திடசங்கட்பம் கொள்வோம்.

தமிழ் மண்ணுக்கே உரிய நீண்ட கால வாழ்வியல் கலாச்சாரத்தையும், அதனோடு ஒட்டிய அரசியலையும் உரிமையாக்கி வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்களே தமிழ் ஈழ தாயக மக்கள்.இதனை அழிக்கவும், பறிக்கவும் பல கட்டங்களாக பல்வேறு வடிவங்களில் இன அழிப்பும் இனப்படுகொலையும் சர்வதேச சக்திகளின் ஆதரவோடு இம்மண்ணில் நிகழ்த்தப்பட்டது.பயங்கர அழிவுகளை நாம் சந்தித்தும் தமிழர் தேசியம் காக்கும் அரசியலில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை தைத்திருநாளில் உறுதிப்படுத்துவோம்.பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா. அவ் விழா எமக்குணர்த்தும் வழியில் பயணிப்போம்.எமக்கு எதிரான சக்திகளுக்கு எமது கலாச்சாரத்திற்கூடாக அரசியல் பலத்தை வெளிபடுத்துவோம்.

தமிழர் தேசத்தின் மக்களாக நாம் வியர்வை சிந்தி உழைத்து வாழும் மண்ணும் அதனைக் காக்க எம்மவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்த மண்ணும், அந்த மண்ணின் உயிர் காக்க மாவீரர் விதையான மண்ணும் என்றும் எமக்கே சொந்தம். அதனை மீள,மீள மக்களுக்கு உணர்த்தும் இன்னுமொரு நிகழ்வாகவே தைப்பொங்கல் கொண்டாடுகின்றோம். எனவே ஒடுக்கப்படும் எமக்கு இது கலாச்சார விழாவிற்கு அப்பால் வாழ்வின் விழா, வாழ்விற்கான போராட்டத்திற்கு உந்து சக்தியான விழா என்பதே உண்மை.

இந்நிலையில் தெற்கின் பேரினவாத ஆட்சியாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர் தேச அரசியல் கூலிகளும் தேசிய பொங்கல் என சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குள் எம்மை கரைத்து விட மீண்டும் மீண்டும் முயற்சிப்பதையும் திட்டமிடுவதையும் ஏற்றுக் கொள்ளவோ அதற்கு இடம் அளிக்கவோ முடியாது என்பதையும் வெளிப்படுத்தும் தேசிய நாளாக இத்திருநாளை அடையாளப்படுத்துவோம்.

அரசியல் விட்டில் பூச்சிகளான எம்மவர்களின் ஆசியோடும், பெரும்பான்மை பலத்தோடும் ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி ஒற்றை ஆட்சி எனும் மீளா அரசியல் இருளுக்குள் ஒட்டுமொத்த தமிழர்களை தள்ளி விடவும்; வடக்கும் கிழக்கும் இணைந்த தாயக அரசியலை வேரோடு அகழ்ந்தெடுக்கவும் பாரிய திட்டத்துடன் உள்ளது என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் நாடு முழுவதும் நிர்வாக சீர்கேடு,ஊழல், இலஞ்சம்,அரச வளங்கள் கொள்ளை என்பன நீண்ட காலமாக நிலவும் சூழ்நிலையில்; வடக்கு கிழக்கில் அதனை மிகை படுத்திக் காட்டி தமிழர்களுக்கு நிர்வாகம் தெரியாது. அரசியல் தெரியாது. தம்முடைய மக்கள் மீது அக்கறை கிடையாது.தேசிய மக்கள் சக்திக்கு மட்டுமே மக்கள் மீது அக்கறை உண்டு. இலஞ்சம் ஊழலை ஒழிக்க முடியும், தடுக்க முடியும் எனும் மாயைக்குள் வடக்கு கிழக்கு மக்களையும் தள்ளி ஒற்றை ஆட்சிக்குள் அடிமைப்படுத்திடவும் சிங்கள பௌத்தத்திற்குள் முடக்கிவிடவும் திட்டமிட்டு அதற்கான கூலிப்படைகளையும் எம் மண்ணில் இறக்கிவிட்டு உள்ளமை நாம் எதிர் நோக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இதற்கு மத்தியில் எம் மத்தியில் நிலவும் உட்கட்சி அரசியல் போட்டி ,அரசியல் காழ்ப்புணர்வு, தனிநபர் அரசியல் பகைமை என்பன எம் அரசியலை அசிங்கப்படுத்துவதோடு அதுவே எமக்கு எதிரான தெற்கின் அரசியல் சக்திகளுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எம்மவர்கள் உணர்வதாகவும் இல்லை.

இத்தகைய அரசியல் அநாகரீகமும் அநாகரிகவாதிகளும் தமிழர் தாயக தூய்மை அரசியல் கொள்கை மூலம் அகற்றப்படல் வேண்டும். தமிழர் புத்தாண்டு பிறப்பான தை திருநாளையும் தை பொங்கலையும் அதனை நடைமுறை தங்குவதற்கான நாளாகக் கொண்டு கூட்டு செயற்பாட்டினை முன்னெடுக்கும் பொது விழாவாக்கி, மக்கள் விழாவாக்கி கூட்டாக பயணிப்போம்.

கொடுக்கப்படும் தமிழனமாக ஒடுக்கப்படும் வர்க்கமாக உலக வாழ் தமிழர்களோடு தமிழர் புத்தாண்டில் கைகோர்த்து தைத்திருநாளில் உங்கள் விழாவினை மன்னிப்பு விடுதலை விடவாக்கி சமயம் கடந்து அரசியல் பலமிக்க சக்தியாக மக்களோடு எழுச்சிக் கொள்வோம் அதுவே பொங்கள் விழா.மக்கள் அரசியல் விழா என மேலும் தெரிவித்துள்ளார்

…..

Bharathy

Bharathy

Related Posts

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

by Thamil
May 17, 2025
0

"இனப்படுகொலை செய்யபட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும்" என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன்...

வவுனியாவில் 5 பல்சர் உந்துருளிகளை திருடிய இளைஞன் ஒருவன் கைது..!

வவுனியாவில் 5 பல்சர் உந்துருளிகளை திருடிய இளைஞன் ஒருவன் கைது..!

by Thamil
May 17, 2025
0

பல்வேறு பகுதிகளில் 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் இன்று (17) தெரிவித்தனர். இம்...

காலை முதல் மின்தடையினால் மக்கள் அவதி ;  மின்சார சபையின் அசமந்தபோக்கு..!

காலை முதல் மின்தடையினால் மக்கள் அவதி ;  மின்சார சபையின் அசமந்தபோக்கு..!

by Thamil
May 17, 2025
0

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மின்தடை ஏற்ப்பட்டுள்ள நிலையில் மின்சார சபைக்கு பலமுறை அறிவித்தும் பலன் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவில்...

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு..!

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு..!

by Thamil
May 17, 2025
0

திருகோணமலை சிவன்கோயிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி இன்று (17) மாலை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு...

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

by Thamil
May 17, 2025
0

யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று...

எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்..!

எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்..!

by Thamil
May 17, 2025
0

"தம்பலகாமம் பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விகிதாசர முறையில் ஒருவர் தெரிவாகிய நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுகின்ற இடத்தில் எங்களுடைய ஆதரவை...

நித்தம் மாத சஞ்சிகையின் மாத இதழ் வெளியீடு ; ரவிகரன் பங்கேற்பு..!

நித்தம் மாத சஞ்சிகையின் மாத இதழ் வெளியீடு ; ரவிகரன் பங்கேற்பு..!

by Thamil
May 17, 2025
0

நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் முல்லைத்தீவு - முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

காய்ச்சல் காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

காய்ச்சல் காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 17, 2025
0

கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் லோகநாயகி (வயது 71)...

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள்..!

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள்..!

by Thamil
May 17, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினிசூறாவளி காரணமாக 03 வீடுகள்...

Load More
Next Post
அனைத்து உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!

அனைத்து உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!

தடைகளைத் தகர்த்தெறிந்து துணிச்சலுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்.!

தடைகளைத் தகர்த்தெறிந்து துணிச்சலுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்.!

திருகோணமலையில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்.!

திருகோணமலையில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி