• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, November 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும்.!

Mathavi by Mathavi
January 13, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நெல் அறுவடை விழாவும் கமக்காரர் கௌரவிப்பு நிகழ்வும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை (13.01.2025) இடம்பெற்றது.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், தற்போதைய காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது. முன்னைய காலங்களில் நெல் அறுவடையின்போது மழை பெய்வதில்லை. ஆனால் இப்போது மழையின் பாதிப்பை நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சில நாட்களுக்குள் கடும் மழை பெய்தபோதும் தெய்வாதீனமாக மிகப் பெரியளவு நெல் அழிவு ஏற்படவில்லை. அந்த மழை மற்றும் இப்போது பெய்யும் மழை என்பனவற்றால் உங்களின் வயல் நிலங்கள் ஈரலிப்பாக உள்ளன. எனவே இதை விவசாயிகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நெல் அறுவடை முடிந்த பின்னர் சிறுதானியங்களை பயிரிடுங்கள். அதற்கான விதைகளை வழங்குவதற்கு விவசாயத் திணைக்களம், பிரதம செயலர் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களும் குளத்தை நம்பி இருபோகத்தை மேற்கொள்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நெற்செய்கை என்பது வான்பார்த்த பயிராகவே உள்ளது. மழையை நம்பி ஒருபோகம் மாத்திரமே செய்கின்றோம். எனவே தற்போதுள்ள காலநிலையின் மாற்றத்தைப் பயன்படுத்தி சிறுதானியப் பயிர்செய்கையில் ஈடுபட்டு விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.

எமது மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், எந்தப் பயிரை உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்யலாம் என்பதையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப விவசாய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும். அதற்கு விவசாயத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றையதினம் நெல் அறுவடையுடன் சேர்த்து மூத்த விவசாயிகளை கௌரவித்திருந்தீர்கள். அதற்கு எனது மனமார்த்த பாராட்டுக்கள். இன்று இளையோர் விவசாயத்தில் நாட்டம் குறைந்தவர்களாக மாறிவிட்டார்கள். வெளிநாட்டு மோகத்தில் அவர்கள் சிக்கியிருக்கின்றார்கள். அங்கு சென்ற பலர் இப்போது நாட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

எங்கள் இளையோர்கள் விவசாயத்தில் இறங்கினால் நாம் உற்பத்தியில் சிறப்பான இடத்தைப்பெற முடியும். வடக்கு மாகாணத்தில் என்ன வளம் இல்லை? இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்திலுள்ளது போன்று வளங்கள் ஏனைய மாகாணங்களில் இல்லை. ஆனால் அதை உரிய வகையில் நாங்கள் பயன்படுத்தத் தவறியிருக்கின்றோம்.

விவசாயமும், கடற்றொழிலும் எமது மாகாணத்தின் முக்கியமான பொருளாதாத் தூண்கள். அவை இரண்டையும் சார்ந்த தொழிற்சாலைகள் எமது பிரதேசத்தில் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உற்பத்திப்பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாகவும் மாற்றியமைக்க முடியும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக கைதடி பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.கபில்ராஜூம் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்கள், ஊரவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

வட மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும்.!

வட மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும்.!

by Mathavi
November 9, 2025
0

கடந்த இரு தேர்தல்களைப் போல் வரவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி...

ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்.!

ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்.!

by Mathavi
November 9, 2025
0

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்று வருகின்றது. ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம்...

உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு.!

உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
November 9, 2025
0

வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அசேலபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை (08) மாலை வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

ஹெரோயினுடன் சிக்கிய ஐவர்.!

ஹெரோயினுடன் சிக்கிய ஐவர்.!

by Mathavi
November 9, 2025
0

நேற்று சனிக்கிழமை (08) ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட காலி, ஹங்கம,...

சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி.!

சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி.!

by Mathavi
November 9, 2025
0

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி வருகின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம்...

வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து.!

வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து.!

by Mathavi
November 9, 2025
0

அம்பலாங்கொடை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
November 9, 2025
0

சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. களனி...

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தீபன்.!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தீபன்.!

by Mathavi
November 9, 2025
0

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், மாவீரர் நாள் 2025 நிகழ்வுகள்...

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

by Mathavi
November 9, 2025
0

ஹட்டன் - மஸ்கெலியா வீதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் வனராஜா பகுதியில் உள்ள ஹட்டன் - மஸ்கெலியா பிரதான...

இலங்கை இராணுவத்தினரால் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை இராணுவத்தினரால் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
November 9, 2025
0

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி