‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்திற்கமைய, களுத்துறை வடக்கு மற்றும் பாணந்துறை – மோதரவில ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சோதனைகளில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாணத்துறை – மோதரவில பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், போதைப் பொருட்களுடன் 35 பேர் கைதாகியுள்ளனர்.
இதேவேளை, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் வாத்துவ கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் கொழும்பு புறக்கோட்டை நகரை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.