• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்.!

Mathavi by Mathavi
January 10, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்.!
Share on FacebookShare on Twitter

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவுக்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதாநாயகன் அவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (10.01.2025) இடம்பெற்றது.

நெல் கொள்வனவு செய்வதற்கு போதிய களஞ்சிய வசதிகள் இருந்தபோதும் அதற்குரிய கடன் வசதிகளை வங்கிகள் வழங்கவில்லை என அரிசி ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், எங்களுடைய மாகாணத்தில் விளையும் நெல் வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகரித்த விலையில் மீண்டும் எமது மாகாணத்துக்கு கொண்டு வரப்படுகின்றமையை தவிர்ப்பதற்காக எமது அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் என கோரினார்.

மேலும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடான நெல் கொள்வனவுக்குரிய நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய அலுவலக முகாமையாளர் ஏனைய அரச மற்றும் தனியார் வங்கிகளின் முகாமையாள்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது, கடந்த காலங்களிலும் கடன்கள் வழங்கப்பட்டதாகவும் இம்முறையும் கடன் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

குறைந்த வட்டி வீதத்தில் நெல் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடன் எல்லையை உயர்த்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது அது நிதியமைச்சின் கொள்கை தீர்மானம் எனவும் வங்கி முகாமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை முழுவதும் ஒரே நடைமுறையே பின்பற்றப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

இருப்பினும் வடக்கிலுள்ள விவசாயிகளின் நெல்லை இங்குள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேவேளை அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் நெல் கொள்வனவு விவரங்களை வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலருடன் பகிர்ந்து கொள்ளுமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

இதன் ஊடாக சில விடயங்களைக் கண்காணித்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், நெல் கொள்வனவுக்கு சங்கங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் ந.திருலிங்கநாதன், ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு திணைக்கள உதவி ஆணையாளர்களுக்கு அறிவுத்தல் வழங்கினார்.

அத்துடன், நெல்லை மத்திய கொள்வனவு நிலையம் ஊடாக கொள்வனவு செய்து அதனை கட்டுப்பாட்டு விலையில் அரிசியாக்கி விற்பனை செய்வது தொடர்பில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் முகாமையாளர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்துரையாடுமாறும் பணித்தார்.

இதேவேளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நெல் விதைப்பின் ஊடாக அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஏனைய விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன், வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் ந.திருலிங்கநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் திருமதி பகீரதி செந்தில்மாறன், அரச மற்றும் தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Mathavi

Mathavi

Related Posts

அரசின் காணி அபகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் குழாம் தயார்.!

அரசின் காணி அபகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் குழாம் தயார்.!

by Mathavi
May 24, 2025
0

காணி அபகரிப்பு நோக்கத்துடன் 28/03/2025 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்தமையால் நாளை ஞாயிற்றுக்கிழமை நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட...

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

by Mathavi
May 24, 2025
0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று நேற்று மாலை கடுமையான காற்றினால்...

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 24, 2025
0

நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று அதிகாலை( 24) நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் உள்ள டொப் பாஸ் (Top Pass)...

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 23, 2025
0

பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சங்கானை பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணகுமார் (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின்...

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 23, 2025
0

யாழில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

by Thamil
May 23, 2025
0

ஐஸ், கேரளா கஞ்சா, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போன்ற போதைப்பொருட்களுடன் 42 பேர் காத்தான்குடி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்....

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

அம்பாறை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை நகரில் இன்று (23) 40 கொகைன் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் நடமாடிய சந்தேக நபரை...

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

by Thamil
May 23, 2025
0

அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக...

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

by Thamil
May 23, 2025
0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியதையடுத்து தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம்...

Load More
Next Post
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்.!

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்.!

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது.!

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது.!

நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை.!

நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி