புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் அரசு தாமதமின்றி ஈடுபட வேண்டும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசு, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசு தனது பதவிக் காலம் முடிவடையும் வரை காத்திருக்காமல் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ADVERTISEMENT
சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ணவுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் பேராயர் இதனைத் தெரிவித்துள்ளார்.