கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (23) “குஷ்” என்ற போதைப்பொருளை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், 34 வயதான ரஷ்ய நாட்டவர் என்றும் அவர் நாட்டில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்தவர் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.