அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
அத்துடன், அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.