• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் சர்வதேச நீதிக்கான அவசர கோரிக்கை.

User1 by User1
December 10, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் சர்வதேச நீதிக்கான அவசர கோரிக்கை.
Share on FacebookShare on Twitter

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டன. அவர்களுக்குரிய நீதியை கேட்டு போராடி வரும் எங்களுக்கும் எமது பிள்ளைகளின் தற்போதைய நிலையறியும் உரிமையும் அதைக்கேட்டுப் போராடும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.

தடையுத்தரவு, பயங்கரவாதத்தடுப்பு பிரிவினரின் விசாரணை, வழக்குத்தாக்கல் செய்தல் என்ற தடைகள் மூலமாக வயோதிபத் தாய்மார்களாகிய எங்களை போராட்டத்திலிருந்து அகற்ற முயற்சிக்கப்படுகிறது.

இலங்கையில் 75 ஆண்டுகளாக தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடாத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வி, பல்கலைக்கழக அனுமதி, தொழில் வாய்ப்பு, மொழி, பண்பாட்டிற்கான உரிமை என்பவற்றில் காட்டப்பட்ட பாரபட்சம், புறக்கணிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அதன் நியாயத்தன்மையை உணர்ந்த தமிழ் அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமது ஆதரவைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்தார்கள். மக்களது ஆதரவு இன்றி போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்க முடியாது என்ற உண்மை போராட்டத்தில் இணைந்திருந்த தரப்புக்கு நன்கு புரியும்.

ADVERTISEMENT

உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி சர்வதேசத்தின் உதவியுடன் 2009 மே மாதத்தில் மௌனிக்கச் செய்யப்பட்டது. அதற்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. சுமார் 20,000 மக்கள் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

அரச பயங்கரவாதம் இந்தளவையும் செய்துவிட்டு “கிரிபத்” கொடுத்து தமது வெற்றியைக் கொண்டாடியது. ஆனால் சிங்கள அரசையும் அதன்வாக்குறுதியையும் வேறுவழியின்றி நம்பி சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் அரசியல் கைதிகளாக சிறையிலும், அடிமைகளாக இரகசிய வதை முகாம்களிலும் வாடுகின்றார்கள். இவர்களிற்கான நீதிக்காக 2,850 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாம் மன அழுத்தத்திற்குள்ளாகி இறந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் தமக்கு வாக்களித்தவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

எம்மையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி கால இழுத்தடிப்புகளை மேற்கோண்டு தமது பதவிக்காலத்தை காப்பாற்றிக் கொள்கின்றனர். நாம் தற்போது சுதாகரித்துக் கொண்டுள்ளோம். ஆனால் சர்வதேசத்திற்கு அரசின் கபடத்தனம் புரியவில்லை. தற்போது “மாற்றம்” என்ற கோஷத்துடன் புதியவர்கள் ஆட்சியமைத்துள்ளனர்.

அவர்களும் போராட்ட வழியில் வந்தவர்கள் என்ற பரிந்துரையை சில நாட்டின் பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவிக்கின்றார்கள். அவர்களுக்கும் அதே கருத்துடைய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றோம். 15 வருடங்களாக பல்வேறுபட்ட பெயர்களில் கொண்டுவரப்பட்ட பொறிமுறைகளில் எம் ஈடுபாடு, அங்கு காட்டப்பட்ட உண்மைத்தன்மையின்மை, உதாசீனங்கள் என்பன எமக்கு பலத்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் தந்ததால் நாம் உள்ளகப் பொறிமுறைகளை நிராகரித்து சர்வதேசப் பொறிமுறையை மட்டும் கோரி நிற்கின்றோம். எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்தை நம்பி எம்மை அணுகுபவர்களுக்கே உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மைத்தனத்துடனும், எம்மை அக்கறையுடனும் அணுகுவதாயின் எமக்கு நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்காக பின்வரும் விடயங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

  1. எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட, முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும் , அவர்கள் அனைவரும் உயிருடனும், நல்ல பதவிகளிலும் தற்போதும் உள்ளார்கள். அதுவே காலம்காலமாக ஏமாற்றம்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும்.
  2. எம்மால் செயலற்றது என்று நிரூபிக்கப்பட்ட OMP அலுவலகம் கலைக்கப்படவேண்டும்.

ஆணையாளர் அவர்களே!
உள்நாட்டு பொறிமுறைகளிலும், ஸ்ரீ லங்கா அரசிலும் நம்பிக்கை இழந்த நாம் சர்வதேச பொறிமுறையை கோரி 2,850 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். சர்வதேசப் பொறிமுறைக்குத் தேவையான சாட்சிகள் ஐ.நா இன் ஆவணம் திரட்டும் பொறிமுறை மூலம் திரட்டப்பட்டுள்ளது. எனவே ஆவணத்திரட்டல் தொடரும் அதேநேரம், அதற்குச் சமாந்தரமாக சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் வயோதிபத் தாய்மாராகிய நாமும் இறப்பதற்கு முன் நீதியைப் பெற்றிட உதவுங்கள்.

User1

User1

Related Posts

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

by Thamil
May 17, 2025
0

"இனப்படுகொலை செய்யபட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும்" என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன்...

வவுனியாவில் 5 பல்சர் உந்துருளிகளை திருடிய இளைஞன் ஒருவன் கைது..!

வவுனியாவில் 5 பல்சர் உந்துருளிகளை திருடிய இளைஞன் ஒருவன் கைது..!

by Thamil
May 17, 2025
0

பல்வேறு பகுதிகளில் 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் இன்று (17) தெரிவித்தனர். இம்...

காலை முதல் மின்தடையினால் மக்கள் அவதி ;  மின்சார சபையின் அசமந்தபோக்கு..!

காலை முதல் மின்தடையினால் மக்கள் அவதி ;  மின்சார சபையின் அசமந்தபோக்கு..!

by Thamil
May 17, 2025
0

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மின்தடை ஏற்ப்பட்டுள்ள நிலையில் மின்சார சபைக்கு பலமுறை அறிவித்தும் பலன் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவில்...

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு..!

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு..!

by Thamil
May 17, 2025
0

திருகோணமலை சிவன்கோயிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி இன்று (17) மாலை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு...

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

by Thamil
May 17, 2025
0

யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று...

எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்..!

எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்..!

by Thamil
May 17, 2025
0

"தம்பலகாமம் பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விகிதாசர முறையில் ஒருவர் தெரிவாகிய நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுகின்ற இடத்தில் எங்களுடைய ஆதரவை...

நித்தம் மாத சஞ்சிகையின் மாத இதழ் வெளியீடு ; ரவிகரன் பங்கேற்பு..!

நித்தம் மாத சஞ்சிகையின் மாத இதழ் வெளியீடு ; ரவிகரன் பங்கேற்பு..!

by Thamil
May 17, 2025
0

நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் முல்லைத்தீவு - முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

காய்ச்சல் காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

காய்ச்சல் காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 17, 2025
0

கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் லோகநாயகி (வயது 71)...

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள்..!

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள்..!

by Thamil
May 17, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினிசூறாவளி காரணமாக 03 வீடுகள்...

Load More
Next Post
கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்.!

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்.!

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.!

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி