களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை(8) நண்பர்களுடன் சேர்ந்து உந்துருளியை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 18 வயதுடைய மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில் விழுந்துள்ளது. அதனை எடுக்க முற்பட்ட போது குறித்த இளைஞர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.