• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

10 ஆவது பாராளுமன்றத்தில்முதலாவது உரை

admin by admin
December 5, 2024
in இலங்கை செய்திகள்., நாட்டு நடப்புக்கள்
0
10 ஆவது பாராளுமன்றத்தில்முதலாவது உரை
Share on FacebookShare on Twitter

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே !

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து என்னை இந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய வாக்காளர் பெரு மக்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு , நீண்ட காலம் திருகோணமலை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப் படுத்திய மறைந்த தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களை நினைவு கூர்ந்தவனாக 10 ஆவது நாடாளுமன்றத்தில் எனது முதலாவது உரையை ஆற்ற விளைகின்றேன்.

எனது உரையில் மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பாகவும் , அண்மையில் நிலவிய காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்கள் தொடர்பாகவும் கருத்துரைக்க விரும்புகின்றேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே !
மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் தனது உரையில் ஊழலற்ற, இனவாதமற்ற, மதவாதமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையான ஒரு ஆட்சியை நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க கூற்றாகும். இதற்கு முன்பு கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் மேற்கொண்ட ஊழல், இனவாதம், மதவாதம் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற ஆட்சி முறை ஆகியன இந்த நாடு இன்றைய இக்கட்டான சூழ்நிலையை அடைய முதன்மையான காரணி என்பது அனைவரும் அறிந்த விடயம்.
எனவே குடியரசுத் தலைவர் கூறியவாறு ஊழலற்ற, இனவாதம் அற்ற, மதவாதம் அற்ற மற்றும் வெளிப்படைத்தன்மை முதலியவற்றைக் கொண்ட ஆட்சியை சொல்லில் மட்டுமின்றி இந்த அரசு செயலிலும் காட்ட வேண்டும்.

“ சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் “

என்ற வள்ளுவர் வாக்கினை நினைவில் கொண்டவர்களாக இந்த ஆட்சியாளர்கள் செயல்படுவார்கள் என நம்புகின்றேன் . மேலும் குடியரசுத் தலைவர் தனது உரையில் அரச சேவையினை வினைத்திறன் உள்ளதாக ஆக்கப் போவதாகவும் சட்ட ஆட்சியை நிலைநாட்டப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையினை உலகத்தரத்திற்கு உயர்த்தினால் தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 139 குடிமக்களுக்கு ஓர் அரச ஊழியர் இருந்தார், இன்று 13 பேருக்கு ஓர் அரசு ஊழியர் காணப்படுகின்றார் என கூறப்படுகின்றது.
எனவேதான் அரச சேவையினை ஒழுங்குபடுத்தி மீளமைக்க வேண்டும்.
அடுத்து அவர் பேசுகையில் பொதுச் சொத்துக்களை களவாடியவர்களை,மோசடி செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்குவுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் வந்த அரசுகளும் தேர்தல் காலங்களில் இவ்வாறு கூறின, ஆட்சிக்கு வந்த பின்பு எதுவும் நடக்கவில்லை , யாரும் தண்டிக்கப்படவும் இல்லை , ஆனால் இந்த அரசு கூறியதனை கூறியவாறு செய்யும் என நம்புகின்றேன். அத்தோடு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவது மட்டும் அன்றி அவர்கள் மோசடி செய்ததாக கூறப்படும் பணத்தினையும் வளத்தினையும் மீளப் பெற வேண்டும்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயம்பியுள்ளார்.
வேளாண்மை துறை, கடற்தொழில் துறை மற்றும் கைத்தொழில் துறை முதலியவற்றில் இந்த நாடு நீண்ட தூரம் வளர்ச்சி காண வேண்டியுள்ளது.
இத்துறைகள் வளர்ச்சி கண்டால் மாத்திரம் போதாது அபிவிருத்தியும் அடைய வேண்டும்.
பொருளியலில் வளர்ச்சியும் , அபிவிருத்தியும் வெவ்வேறானவை .
வளர்ச்சி என்பது ஒரு மரம் செங்குத்தாக வளர்வது போன்றது. அபிவிருத்தி என்பது அந்த மரம் பல்வேறு கிளைகளை பரப்பி வளர்வது போன்றது.

அதனைப் போன்று கமத்தொழில்,கடற்தொழில்,கால்நடை வளர்ப்பு மற்றும் கைத்தொழில் துறைகளும் பல்வேறு கிளைகளை விட்டு அபிவிருத்தி காண வேண்டும், அத்தோடு மக்களிடையே வருமானப் பங்கீடும் நியாயமானதாக அமைய வேண்டும்.

ஒரு காலத்தில் பொலிவியா நாட்டில் அந்த அரசின் அயராத முயற்சியால் நாட்டின் பொருளாதாரம் 20% ஆல் உயர்ந்தது . இந்த வளர்ச்சிக்கு முன்பு பொலிவியா நாட்டில் 60 வீதமான வருமானத்தினை 40 வீதமான மக்களும் 40 வீதமான வருமானத்தினை 60 வீதமான மக்களும் வைத்திருந்தனர்.
ஆனால் வளர்ச்சிக்குப் பின்பு பார்த்தபோது 80 வீதமான வருமானத்தினை 20 வீதமான மக்களும் 20 வீதமான வருமானத்தினை 80 வீதமான மக்களும் வைத்திருந்தனர். இது ஒரு பொருளாதார அபிவிருத்தி அல்ல. எனவே தான் இந்த அரசு பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியில் மட்டுமன்றி வருமான பங்கீட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகின்றேன்.

அதேபோன்று வேளாண்மை துறை,கடற்தொழில்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை ஆகியவற்றில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் இத்துறைகளுக்கு என தனித்தனியான சிறப்பு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும். எமக்கு அயலில் உள்ள இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கோயம்பத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் விவசாயத்துறை மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பணி அளப்பரியது என்பதனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதேபோன்ற பல்கலைக்கழகங்கள் இந்த நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோல கணனி தொழில்நுட்பத் துறை மேம்பாட்டுக்கு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், ஐஐடி என்று அழைக்கப்படுகின்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் ஆற்றி வரும் பணிகளையும் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இங்கு கல்வி கற்றவர்கள் அந்த நாட்டிற்கு கொண்டு வருகின்ற அந்நிய நாணய மாற்றின் அளவையும் , பொருளாதார மேம்பாட்டுக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Related Posts

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

by Mathavi
June 7, 2026
0

மலையகத்தில் காணப்படும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதன் ஊடாக உயிர் ஆபத்துகளையும், பொருள் சேதங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும்,...

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி, வளலாய் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர்...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 7, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு...

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர், 2028ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பாரிய கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு இப்போதிலிருந்தே எடுக்க...

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

by Mathavi
June 7, 2026
0

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்குப் பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய தாய்...

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

by Mathavi
June 7, 2026
0

தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பொருளாதார வெற்றியை, அந்தந்த நாட்டு அரசுகளால் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தின் தொழில்முனைவோர், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள்...

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில்...

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி