• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஜனாதிபதியின் அதிரடி திட்டம் – பாராளுமன்றம்

admin by admin
December 5, 2024
in இலங்கை செய்திகள்., நாட்டு நடப்புக்கள்
0
ஜனாதிபதியின் அதிரடி திட்டம் – பாராளுமன்றம்
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி உரையாற்றுகையில் கல்வித்துறை மேம்பாடு குறித்தும் குறிப்பிட்டு இருந்தார். கல்வித்துறையினை மேம்படுத்த வேண்டுமாயின் கற்றல் கற்பித்தல் முறைகளில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளதுடன் ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்க்கும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் 166 தொடக்க கல்வி ஆசிரியர் பற்றாக்குறையும் 116 கணித ஆசிரியர் பற்றாக்குறையும் 53 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் 52 கணினி ஆசிரியர் பற்றாக்குறையும் 60 அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறையும் 53 தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையும் என ஆக மொத்தம் 500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதனால் மாணவர்களது கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு போதிய ஆசிரிய ஆளணியை மாவட்டத்திற்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இப்பொழுது உள்ள முறையில் ஆசிரியர் வளப்பங்கீடு சரியான முறையில் அமையவில்லை. ஆசிரியர் நியமனத்தின் பொழுது பெரும்பாலான ஆசிரியர்கள் திருகோணமலைக்கு வருகின்றார்கள், வந்து சில காலங்களில் தத்தமது மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுகின்றார்கள்.

இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கல்வியற் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் பொழுது பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்தால் இந்த சிக்கலை தீர்க்கலாம்.
உள்நாட்டு அமைச்சு கிராம அலுவலர்களை நியமிக்கும் பொழுது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளரின் பிரிவுகளில் உள்ளவர்களையே நியமிக்கின்றது. இதே முறையை கல்வி அமைச்சும் பின்பற்றினால் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணலாம்.

மேலும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. கல்வித்துறைக்கு 2023 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் 1.3 வீதமான நிதியும் 2024இல் 1.5 வீதமான நிதியுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக் குறைந்தது 5 வீதமாக ஆவது உயர்த்த வேண்டும்.
மேற்குலக நாடுகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் 5 வீதத்துக்கும் கூடுதலான தொகையினை கல்விக்கு ஒதுக்குகின்றன என்பதனையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

மேலும் குடியரசுத் தலைவர் தனது விளக்க உரையில் கப்பல் போக்குவரத்து துறையினை மேம்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். திருகோணமலையில் உள்ள இயற்கை துறைமுகமானது இந்துமா கடலில் போக்குவரத்து செய்கின்ற கடற்கலங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய ஓர் நடுவத்தில் அமைந்துள்ளது.

இந்த துறைமுகத்தினை விருத்தி செய்து அயலில் உள்ள வெண்ணெய்க் குதங்களையும் மறுசீரமைப்பு செய்தால் பெருமளவான அந்நிய நாணய மாற்றினை ஈட்ட முடியும் என்பதோடு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பும் வழங்க முடியும். இதற்கு துறைமுகத்தினை மேம்படுத்துவதோடு இடையீடு இன்றி மின் வழங்கவும் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் குடியரசுத் தலைவர் தனது உரையில் சுகாதார மேம்பாடு பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் மாவட்ட மருத்துவமனையில் 54 மருத்துவர் பற்றாக்குறையும் 9 துறை சார் மருத்துவ நிபுணர் பற்றாக்குறையும் 7 செவிலியர் பற்றாக்குறையும் 3 மருந்தாளர் பற்றாக்குறையும் 39 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் 3 சாரதிகள் பற்றாக்குறையும் காணப்படுகின்றது.

மேலும் மாகாண அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 40 துறைசார் மருத்துவ நிபுணர் பற்றாக்குறையும் 21 மருத்துவர் பற்றாக்குறையும் 27 செவிலியர் பற்றாக்குறையும் 22 மருந்தாளர் பற்றாக்குறையும் 06 மிகை ஒலி ஊடுகதிர் தொழில்நுட்பவியலாளர் பற்றாக்குறையும் 100 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது.
இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் மத்திய அரசின் கீழ் உள்ள திருகோணமலை மாவட்ட மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவானது ஒரு பகுதி கட்டப்பட்ட நிலையில் குறையாக காணப்படுகின்றது. இப்பிரிவில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதனால் நோயாளிகளை நிருவகிக்க போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. இக்கட்டிடத்தினை கட்டி முடிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தொடர்ந்தும் குடியரசுத் தலைவர் தனது கொள்கை விளக்க உரையில் “ Clean Srilanka “ பற்றியும் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை மாவட்டமானது 90 கிலோ மீட்டர் நீளமான சுற்றுலாப் பயணிகளை கவரும் கடற்கரையினைக் கொண்டுள்ளது, எனினும் இந்த கடற்கரைகள் போதுமான தூய்மையினை கொண்டவையாக காணப்படவில்லை.
போத்தல்,பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கரை ஒதுங்கும் இடங்களாக காணப்படுகின்றன. இதனை மாற்றியமைக்க ஆவன செய்யப்பட வேண்டும்.

முன்னுரைத்தவாறு அவர் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் , நீண்ட காலமாக இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள இனச் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டான முன்மொழிவுகள் எதனையும் அவர் முன் வைக்கவில்லை என்பது கவலை தோய்ந்த செய்தியாகும்.

“ சொல்லாமலே செய்வர் பெரியார் “

என்னும் முதுமொழிக்கு அமைய மேன்மை தங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இச்சிக்கலுக்கு ஒரு நிலையான தீர்வினை காண்பார் என்ற நம்பிக்கையோடு குடியரசு தலைவர் அவர்களின் 10 ஆவது கொள்கை விளக்க உரை மீதான கருத்துரையினை நிறுத்திக் கொண்டு, அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி இந்த உயரிய சபையின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் முழுமையான அளவில் 23,463 ஏக்கர் நெற்செய்கையும் பகுதி அளவில் 10,525 ஏக்கர் நெற்செய்கையும் சேதமடைந்துள்ளன. இதனால் 12,994 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இம் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாகவும் 18 குளங்கள் பகுதியளவிலும் உடைப்பெடுத்துள்ளன.

அதேபோன்று மாவட்டத்தின் கடற்கரை பிரதேசத்தினை அண்டி வாழ்கின்ற மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு செல்லாத காரணத்தினால் 23,178 மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வருமானத்தினை இழந்து இன்னல் உறுகின்றனர். மேலும் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்த காரணத்தினால் 4250 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினருக்கும் இடருதவிகள் வழங்க ஆவன செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டு எனது உரையினை நிறைவு செய்கின்றேன்.

என்று உரையினை நிறைவு செய்தார்

Related Posts

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

by Mathavi
June 16, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

by Mathavi
June 16, 2026
0

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள்...

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

by Mathavi
June 16, 2026
0

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 ஆவது முறையாக நேற்று...

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர்...

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

by Mathavi
June 16, 2026
0

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம்...

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
June 16, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி