• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் !

admin by admin
September 5, 2024
in Uncategorized, இலங்கை செய்திகள்.
0
கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் !
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதியினதும் அமைச்சரவினதும் விவேகம் அற்ற தீர்மானத்தால் கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை 83,000 கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு இருக்கின்றன.

2024 ஆம் ஆண்டு மாதம் ஒன்றுக்கு 60,000 கடவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது விநியோகிக்கப்படுகின்ற சாதாரண கடவுச்சீட்டுக்கு பதிலாக எலக்ட்ரானிக் கடவுச்சீட்டு வழங்க மேற்கொண்ட முயற்சியின் செயற்பாடு தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது.

இந்த முறையை அறிமுகப்படுத்தும் வரை மக்களுக்கு சாதாரண கடவுச்சீட்டை வழங்க வேண்டும். அதனை சாதாரணமாகவும் தொடர்ந்தும் வழங்க முடியாத நிலை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இலக்ட்ரோனிக் கடவுச்சீட்டுக்களை அறிமுகப்படுத்தும் வரை அரசாங்கம் கடவுச்சீட்டுக்கலுக்கான விண்ணப்பங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்க வேண்டும்.

இதுவரை நாளொன்றுக்கு 2000 கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்க வேண்டி இருந்த போதும், 900 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுகின்றது. இதனால் நீண்ட வரிசை ஏற்பட்டு பாரிய சிக்கல் நிலையை தோற்றுவித்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இன்று(04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் குடிவரவு குடியகல்வுத்திணைக்களத்திடம் காணப்படுகின்ற கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 30 000 வரை குறைந்திருக்கின்றது. ஈ-கடவுச்சீட்டு விநியோகத்தில் கொள்வனவு நடைமுறை எதனையும் பின்பற்றவில்லை.

தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு அவற்றை வழங்கி இருப்பதனால், இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதுள்ளது. இதற்காக சாதாரண விலை மனுக் குரல் இடம் பெற்றிருக்க வேண்டும். அதையும் முறையாகச் செய்யவில்லை.

சாதாரண கடவுச்சீட்டுகளை அச்சிடும் நிறுவனங்களுக்கு அதனை அச்சிடுவதற்கான போதுமான தொகைகள்(oders) வழங்கப்படவில்லை. கடவுச்சீட்டுக்களுக்கான கேள்விகள் என்ன என்பது குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு தெரியாதா என்கின்ற ஒரு சிக்கலும் ஏற்படுகின்றது.

அது குறித்து பிரச்சினைகள் இல்லை என்பதால் மாதத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது. எனவே இந்த சிக்கலுக்கு விரைவான தீர்வு பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சரவை இந்த E-கடவுச்சீட்டு வேலைத்திட்டத்தில் எந்த ஒரு கொள்முதல் நடைமுறையும் இல்லாமல் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருக்கின்றது.

அதனால் இந்த பிரச்சினை தற்பொழுது உக்கிரமடைந்திருக்கிறது. இவ்வாறான அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மாற்று திட்டம் இருக்க வேண்டும். அரசாங்கத்திடம் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை.

இந்த வரிசை ஏற்பட்டமைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையே பொறுப்புக் கூற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Posts

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

by selvan
June 12, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...

நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!

நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!

by selvan
June 12, 2026
0

கண்டி நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இம்புல்பிட்டிய உச்சியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மரம் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று...

வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!

வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!

by Mathavi
June 12, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக இன்று 12.06.2026 கிளிநொச்சி பரந்தன் பொதுச்சந்தையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாலை மரம் முறிந்து வீழ்ந்தமையால் வர்த்தக நிலையம்...

அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!

அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!

by Mathavi
June 12, 2026
0

தற்போதைய அரசின் செயற்திறனற்ற தன்மையினாலும், அனுபவமின்மையினாலும் நாடு மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நாட்டின்...

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
June 12, 2026
0

இலங்கையில் நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கியமையால் 122 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத்...

அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!

அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!

by Mathavi
June 12, 2026
0

அரசின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் இழக்கப்பட்டு, அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு...

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!

by Mathavi
June 12, 2026
0

பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்....

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது.!

by Mathavi
June 12, 2026
0

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு.!

மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 12, 2026
0

மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (12) வெள்ளிக்கிழமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி