ஆங்கில கால்வாயை(English Channel) சிறிய படகு மூலம் கடக்க முயன்ற இரண்டு புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நீரோட்ட பகுதியில் இந்த சிறிய படகின் துயரகரமான சம்பவம் அரங்கேறி இருப்பதாக பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறிய படகு விபத்தில் இருந்து 50 புலம்பெயர்ந்தவர்கள் வரை மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், பிரான்ஸ் கடல் பகுதியில் சிறிய படகில் நடந்த சோகமான சம்பவத்தில் உயிரிழப்பு நடந்து இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும், இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படக்கூடிய மக்களை சுரண்டு கூடிய குற்றவாளிகளை தண்டிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
இந்த இறப்பு தொடர்பான விசாரணையை பிரான்ஸ் முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Related Posts
குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காக 70 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது....
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 49 பேரின் உடல்கள் மீட்பு!
சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று...
எரிபொருள், உர விலைகள் விரைவில் குறையும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை
எரிபொருள் மற்றும் உரம் விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தின் சிப்பேவா பால்ஸ் பகுதியில் உள்ள விவசாயிகளிடம்...
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரியாவிற்கு பயணம்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இரண்டு நாள் அரசமுறைப் பயணத்தின்போது, சீன...
புட்டினுக்கு பகிரங்க கடிதம் – நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி!
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர்...
சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!
18 வயதான ஹென்றி நோவாக்கின் (Henry Nowak) கொலையைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து,...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா நிராகரிப்பு!
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்க ஆதரவுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை, லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பில் ஈரான் ஆதரவு...
இந்தியாவின் ருத்ரா எம்-2 ஏவுகணைச் சோதனை வெற்றி!
ருத்ரா எம்-2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. வானிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த ருத்ரா எம்-2 ஏவுகணை, எதிரி நாடுகளின்...
எங்கள் இறையாண்மையை உரசிப் பார்க்க முயன்றால், அடுத்த பதிலடி மோசமாக இருக்கும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிப் பார்க்க முயன்றால், அடுத்தகட்ட பதிலடி, அனைத்து சட்டங்கள், எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது....
மிக சக்திவாய்ந்த சூரியப் பேரலை ஒன்று பதிவாகியுள்ளது!
சூரியனிலிருந்து மிக சக்திவாய்ந்த சூரியப் பேரலை (Solar Flare) ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விண்வெளி வானிலை கண்காணிப்பு மையம்...










