• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ருவாண்டாவில் புலம்பெயர் தமிழ் அகதிகளுக்கு பாலியல் தொல்லை-நரக வேதனை அனுபவிக்கும் தமிழ் பெண்கள்..!

Thinakaran by Thinakaran
February 14, 2024
in இலங்கை செய்திகள், உலக செய்திகள்
0
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சிதீவு அகதிகளை நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறிய பின்னரும் அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அகதிகள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளதாக The New Humanitarian கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.

23 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவர் கிழக்காபிரிக்க நாட்டின் தலைநகரான கிகாலியில் உள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் ஒக்டோபர் 18ஆம் திகதி தாதி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறினார்.

இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னரும் அகதிகளை “மூன்றாவது நாட்டில்”மீள்குடியேற்றம் செய்ய பிரித்தானியா ஏற்பாடு செய்ய காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு ஆண் புகலிடக் கோரிக்கையாளர்களும் பல துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரண்டு பேரும் ஒகஸ்ட் மாதம் தங்களுடைய தங்குமிடத்திலிருந்து ருவாண்டா இராணுவ வைத்தியசாலைக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவர்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக” கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியாவிற்கு கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த தீவிற்கு இலங்கை புகலிட் கோரிக்கையாளர்கள் சென்றப் பின்னர், முதல் முறையாக அதிகாரிகள் அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

“டியாகோ கார்சியா ஒரு இராணுவத் தளத்தைக் கொண்ட ஒரு தீவு ஆகும், அங்கு எந்த குடிமக்களும் இல்லை, மேலும் இந்த குழுவின் நீண்ட கால வசிப்பிடத்திற்கு ஏற்ற இடம் அல்ல” என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

சர்வதேச சட்டத்திற்கு இணங்க, சர்வதேச பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கான தீர்வுகளைப் பாதுகாக்கவும் நாங்கள் பிரித்தானியாவை தொடர்ந்து கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், தீவின் நிலைமையை “நரகமானது” என்று விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதேசத்தின் அசாதாரண சட்ட நிலை அங்குள்ளவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தற்கொலை முயற்சிகள், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடந்துள்ளன.

இலங்கை புலம்பெயர்ந்தோர் கனடாவுக்குச் செல்ல முயன்றபோது அவர்களின் படகு கடலில் சிக்கியதை அடுத்து, அக்டோபர் 2021 இல் முதல் குழு டியாகோ கார்சியாவில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

Tags: அகதிகளுக்குஅனுபவிக்கும்இலங்கைஉலகசெய்திகள்தமிழ்தொல்லை-நரகபாலியல்புலம்பெயர்பெண்கள்ருவாண்டாவில்வேதனை

Related Posts

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிலில் நெருக்கடி..!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிலில் நெருக்கடி..!

by Thamil
July 12, 2025
0

"அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிற்றுறை தற்போது பெரும் நெருக்கடியின் அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்தியாவுடன் கையெழுத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால் எமக்கு...

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்..! 

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்..! 

by Thamil
July 12, 2025
0

வவுனியா, கூமாங்குளம் மதுபானசாலை அருகில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்வத்தில் 5 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், பொலிஸாரின் 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வவுனியா, கூமாங்குளம் பகுதியில்...

உதயசூரியன் கிண்ணத்தை தமதாக்கிய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்..!

உதயசூரியன் கிண்ணத்தை தமதாக்கிய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்..!

by Thamil
July 12, 2025
0

யாழ். வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதி விழா இன்று மதியம் 2:30 மணியளவில் விருந்தினர்களின் வரவேற்புடன் மைதான முன்றலில்...

கல்முனை அஸ் – ஸுஹரா பாடசாலைக்கு நீர்த்தாங்கி வழங்கி வைப்பு..!

கல்முனை அஸ் – ஸுஹரா பாடசாலைக்கு நீர்த்தாங்கி வழங்கி வைப்பு..!

by Thamil
July 12, 2025
0

கல்முனை அஸ் - ஸுஹரா பாடசாலையின் நீண்ட காலத் தேவையான நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று (12) சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கல்முனை...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி