• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

எங்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக முதல்வர் வழிசெய்ய வேண்டும்.!

Thinakaran by Thinakaran
February 11, 2024
in Uncategorized, இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

இந்திய முதலமைச்சர் எங்களுடைய படகுகளை தங்களுடைய எல்லைக்குள்ளே அனுமதித்து அங்கு மீன் பிடிப்பதற்கு வழிவகுப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. அதனை செய்ய முன்வராமல் தங்களுடைய மீனவர்களது நலன் கருதி எங்களுடைய வளங்களை அழித்து, எங்கள் வாழ்வாதாரத்தை சூறையாடி, எங்களை பட்டினிச்சாவிலே இட்டுச் செல்வது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மீது கருணை இல்லாத அல்லது துரோகமான செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது என வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் தொடர்ச்சியாக இழுவைமடி தொழில் செய்வதற்கான ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கே பிடிபட்ட மீனவர்களை விடுவிக்கும்படி வற்புறுத்தி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ADVERTISEMENT

அதேவேளையில்  தமிழ்நாட்டு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அந்த நாட்டின் பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு வினயமான கடிதத்தை அனுப்பி இருக்கின்றார். இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும், தொடர்ந்து பிடிக்க கூடாது என்ற ஒரு கருத்தை முன்வைத்து ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.

அத்தோடு இலங்கையிலே 2018 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு படகுகள் ஒழுங்குப் பிரமாணம் என்ற சட்டத்தை மீள் பரிசீலனை செய்து அந்த சட்டத்தை இல்லாது ஒழிக்கும் வகையிலே இலங்கையை வற்புறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருக்கின்றார்.

தொடர்ச்சியாக எங்களுடைய மீனவர்கள் படும் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் எண்ணில் அடங்காது. அந்த வகையிலே உங்களது இழுவைமடி தொழிலாளர்களை அழைத்து எங்களது எல்லையை தாண்டி வந்து வாழ்வாதாரத்தையும் வளங்களையும் அழிக்காமல் இருக்கக்கூடிய வகையிலே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என முதலமைச்சரவர்களை நாங்கள் பலமுறை கேட்டிருக்கின்றோம். இதன்மூலம் இழுவைமடி தொழிலை நிறுத்த முடியும் என ஆலோசனை வழங்கியிருந்தும் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

தமிழக முதலமைச்சரவர்கள் எங்களது வளங்களையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்கு தன்னாலான நல்ல முயற்சியை எடுத்து, எங்களுடைய வாழ்வாதாரத்தை எங்களுக்கே வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஏழரை கோடி மக்களின் ஆயிரத்தில் ஒரு பகுதியான இழுவைமடி தொழிலாளர்களின் தொழிலை நிறுத்தி மாற்று முறை தொழிலுக்கு அவர்களை மாற்றி, பாரம்பரிய முறையில் தொழில் செய்வதற்கு முன்வர வேண்டும் என கேட்டு நிற்கின்றேன் – என்றார்.

Tags: இலங்கைஎங்கள்ஏனையவைகாக்கசெய்திகள்தமிழகமுக்கியமுதல்வர்யாழ்வழிசெய்யவாழ்வாதாரத்தைவேண்டும்
Thinakaran

Thinakaran

Related Posts

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

by Mathavi
May 24, 2025
0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று நேற்று மாலை கடுமையான காற்றினால்...

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 24, 2025
0

நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று அதிகாலை( 24) நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் உள்ள டொப் பாஸ் (Top Pass)...

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 23, 2025
0

பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சங்கானை பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணகுமார் (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின்...

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 23, 2025
0

யாழில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

by Thamil
May 23, 2025
0

ஐஸ், கேரளா கஞ்சா, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போன்ற போதைப்பொருட்களுடன் 42 பேர் காத்தான்குடி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்....

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

அம்பாறை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை நகரில் இன்று (23) 40 கொகைன் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் நடமாடிய சந்தேக நபரை...

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

by Thamil
May 23, 2025
0

அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக...

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

by Thamil
May 23, 2025
0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியதையடுத்து தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம்...

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் இன்றைய தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின்...

Load More
Next Post

வடமாகாணம் இந்தியாவின் மாநிலம் அல்ல.!

முட்டையின் விலை ஏற்றம்.!

அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படாத மருந்துகள்.!

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி