• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

எப்படியிருந்தோம்; இப்படியாகி விட்டோமா? (ஆசிரியர் பார்வையில்..)

Thinakaran by Thinakaran
February 10, 2024
in Uncategorized, இலங்கை செய்திகள், நாட்டு நடப்புக்கள், யாழ் செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டதே. பாடகர் ஹரிகரன் குழுவினரின் யாழ்ப்பாண இசைநிகழ்வு இத்தகைய உள்ளக்கிளர்த்தல்களைப் பலரிடம் எழுப்பிவிட்டது. யாழ்ப்பாணத்தவர்கள் பொதுவாகவே கலையை ஆராதிப்பவர்கள் தான். கலைஞர்களை மதிப்பவர்கள் தான். ஆனால் சினிமாக் கூத்தாடிகளுக்குப் பின்னால் இப்படி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எந்தக் காலத்திலும் அலைந்தவர்கள் அல்லர்.

இப்போது ’முற்றவெளியில் முதன்முறையாக ‘ என்ற அறிவிப்புடன், ஏதோ கலையுணர்வே அற்ற ஜென்மங்களுக்காக , மனமிரங்கி வந்திருப்பதாகவே ஹரிகரன் இசைநிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு ஈழத்தவர். புலம்பெயர் பணக்காரர்களில் ஒருவர். அவருக்கு வேண்டுமானால் சினிமாக் கூத்தாடிகள் வானத்தில் இருந்து வந்தவர்கள் போல தெரியலாம். அவரது மனைவி ரம்பா போன்ற நடிகைகள் தான் உலகில் உன்னதமானவர்கள் என்று அவர் நினைக்கலாம். ஆனால் அதற்காக ஈழத்தமிழர்களை அவர் கிள்ளுக்கீரையாக நினைப்பது அவரது அறிவிலித்தனத்தையே காட்டும்.
1990 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி. இதே யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எள் போட்டால் கூட விழ இடமில்லாத சனக்கூட்டம். வந்தது வயோதிபத்தின் ஆரம்பத்தில் இருந்த தேனிசை செல்லப்பா. அவர் பாலுணர்வைத் தூண்டும் குத்துப்பாடல்களைப் பாடியவரல்லர், தனக்கு கூட்டம் சேர்க்க தமன்னா போன்ற கவர்ச்சி நடிகைகள் புடைசூழவும் வந்தவரல்லர். ஆனாலும் அவரைக் காண, அவர் பாடலைக் கேட்க தாயகத்தின் பல பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். தேனிசை செல்லப்பா தமிழர்களின் விடுதலையை நேசித்த ஒரு பிறவிப்பாடகன். புலிகளைப் பாடிய வாயால் அரசியல்வாதிகளையோ, சினிமாத்தனமான குப்பைகளோயோ பாடமாட்டேன் என்று சத்தியம் செய்த நித்தியக்கலைஞர். எனவே நெருப்பாறாக அவர் வாயில் இருந்து வந்த இசையில் நரம்புகள் முறுக்கேறி, விடுதலையுணர்வு முற்றவெளியை அன்றைக்கு நிறைத்திருந்தது.

அதேமுற்றவெளியில் தான் இப்போது ஹரிகரன் குழுவினரின் இசைக்கேளிக்கை நிகழ்வும் நடந்தேறியுள்ளது. இளையோரின் பாலுர்வுணவைத் தூண்டி, அவர்களை தென்னிந்தியச் சினிமா மோகத்துக்குள் வீழ்த்தி, கேளிக்கைப் பாதைக்குள் பயணிக்க வைப்பதே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம். ‘ ஈழத்தமிழர்கள் எப்போதும் அழுது கொண்டிருக்க வேண்டுமா? ஆறுதலுக்கு இப்படியான நிகழ்ச்சிகள் வேண்டாமா?’ என்று ஒருசாரார் கம்புசுற்றக்கூடும். ஆனால் ‘ஈழத்தமிழர்கள் எப்போது அழுதுகொண்டிருந்தார்கள்?’என்று திருப்பிக் கேட்பதே பொருத்தமானது. போர் ஒருபக்கம் தேசத்தில் தீயாகத் தகித்தபோதும், மறுபுறம் மக்களை கலை, இலக்கிய செயற்பாடுகளால் எப்போதும் துவளவிடாமல் புத்துணர்ச்சியூட்டும் பணி ஓய்ந்ததே இல்லை. அதனால்தான் கலைபண்பாட்டுக்கழகம் என்ற தனிப்பிரிவையே உருவாக்கி, மக்களின் மனதை ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சிகள் முடிவில்லாமல் நடந்தன. முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை ஒருபுறம் போரும், மறுபுறம் கலையுமாக வாழ்ந்தவர்கள் தான் ஈழத்தமிழர்கள். ஆனாலென்ன, எமது பண்பாடும் , கலையும் வேறுவிதமானவை. மலினமான உணர்வுகளை மையமாகக் கொண்டவையல்ல. மாறாக மக்களை ஆற்றுப்படுத்துவதோடு, மானுட விடுதலைக்கான ஆயுதங்களாகவும் விளங்கின. எமது மரபை, தொன்மையை, இருப்பை அடுத்த சந்ததிக்கு ஊடுகடத்தும் கருவிகளாகவும் கலைகளை நாம் கைக்கொண்டிருந்தோம். அப்போது எந்தக் ஹரிகரனோ, தமன்னாவோ, யோகி பாபுவோ இங்கு வரவில்லை. எங்களுக்காக எங்கள் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எம் ஆன்மாவை ஆறுதல்படுத்தினார்கள். பதிலுக்கு நாமும் அவர்களைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இப்போது நடப்பதென்ன..? எங்கள் வக்கிர உணர்வுக்கு தீனிபோடும் வகையில் களியாட்டங்கள் நடத்தி, இதுவே நாம் பிறப்பெடுத்த நோக்கம் என்பதாக நம்பவைக்கப்படுகிறோம். இந்தக் களியாட்ட நிழலில் நம் போராட்டத்தின் வீரவரலாறு புதைக்கப்படுகிறது. எம் பண்பாடு சிதைக்கப்படுகிறது. இத்தகைய விஷச்செடிகள் வளர்வது ஈழத்தமிழினத்தின் தனித்துவத்துக்கும், உரிமைக்கான போராட்டத்துக்கும் எப்போதும் ஆபத்தே. இனியேனும் கொஞ்சம் விழிப்படைவோம். இரவல் சேலையில் கொய்யகம் போடாமல், நமக்கான நம் கலைஞர்களை அவர்களின் கலைகளைக் கொண்டாடுவோம். நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம்.

ADVERTISEMENT
Tags: ஆசிரியர்இப்படியாகிஇலங்கைஎப்படியிருந்தோம்;ஏனையவைசெய்திகள்நடப்புக்கள்நாட்டுபார்வையில்..)யாழ்விட்டோமா?
Thinakaran

Thinakaran

Related Posts

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 23, 2025
0

பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சங்கானை பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணகுமார் (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின்...

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 23, 2025
0

யாழில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

by Thamil
May 23, 2025
0

ஐஸ், கேரளா கஞ்சா, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போன்ற போதைப்பொருட்களுடன் 42 பேர் காத்தான்குடி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்....

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

அம்பாறை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை நகரில் இன்று (23) 40 கொகைன் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் நடமாடிய சந்தேக நபரை...

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

by Thamil
May 23, 2025
0

அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக...

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

by Thamil
May 23, 2025
0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியதையடுத்து தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம்...

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் இன்றைய தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின்...

இலங்கை அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை – கஜேந்திரகுமார் தெரிவிப்பு..!

இலங்கை அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை – கஜேந்திரகுமார் தெரிவிப்பு..!

by Thamil
May 23, 2025
0

"இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று ராஜபக்‌ஷக்‌கள் கனவு காணக்கூடாது – சுனில் ஹந்துன்நெத்தி பதிலடி..!

மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று ராஜபக்‌ஷக்‌கள் கனவு காணக்கூடாது – சுனில் ஹந்துன்நெத்தி பதிலடி..!

by Thamil
May 23, 2025
0

"பாரிய கொலைக் குற்றங்களை இழைத்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்களை மக்கள் எவரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று ராஜபக்ஷக்கள்...

Load More
Next Post

கடலில் மூழ்கி ஒருவர் சாவு.!

இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு. !

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்பம்.!

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி