• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி.!

Thinakaran by Thinakaran
February 8, 2024
in Uncategorized, இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

2024 பெப்ரவரி 7 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ‘சமர் அலி’  – ‘லிகான் ஓமா’ ஆகிய இருவருடனும் –  அதன் பின்னர் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ‘டொன் டேவிஸ்’ என்பவருடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். 

காங்கிரஸ் உறுப்பினர்களான சமர் அலி  – லிகான் ஓமா ஆகிய இருவரும் அமெரிக்காவின் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் மிகவும் முற்போக்குவாத இளம் அரசியல் தலைவர்களாவர். இளைஞர்கள் மட்டத்தில் கணிசமாக ஆதரவு பெற்றவர்கள். மனித உரிமைகள் தொடர்பாகவும் – சிறுபான்மை மக்கள் அல்லது இனங்கள் வெள்ளையர்களால் இனவாதக் கோணத்தில் பாதிக்கப்படுகின்ற போது அக்கறை செலுத்துபவர்கள். சர்வதேச மட்டத்திலும் ஏனைய இனங்கள் அல்லது ஏனைய நாடுகளுக்கு தங்களது நலன்கள் சார்ந்து மட்டும் அமெரிக்க அரசு முடிவெடுத்து அந்த நாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்ற இடங்களில் துணிந்து குரல் எழுப்புகின்ற இளம் அரசியல் தலைவர்களாக இரு பெண் காங்கிரஸ் உறுப்பினர்களும் உள்ளனர். 
IMG 20240208 WA0069
தமிழர்களுடைய விவகாரங்களிலும் இருவரும் அக்கறைகாட்டி வருபவர்கள் காங்கிரஸில் தமிழ் மக்கள் விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்ட போது இருவரது ஆதரவும் பெறக்கூடியதாக இருந்திருக்கின்றது.

குறிப்பாக காங்கிரஸ் உறுப்பினரான பெண்மணி ‘சமர் லீ’ கணிசமான இடங்களில் தமிழ் மக்கள் சார்பில் குரல்கொடுத்து வருகின்றார். தன்னுடைய பேச்சுகளிலும் அதேநேரம் தன்னுடைய எழுத்துகள் மற்றும் – கடிதங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள் – போர்க் குற்றங்கள் போன்ற பல விடயங்கள் சம்பந்தமாக குரல் எழுப்பி வருகின்றவராவார். மருதங்கேணி விவகாரம் தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  கைது செய்யப்பட்ட போது தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தவர் என்பதுடன் தன்னுடைய பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களுடனும் மிக நெருங்கிய தொடர்பினை வைத்திருப்பவர்.

ADVERTISEMENT

அதேவேளை – ‘லிகான் ஓமர்’ மிகவும் முற்போக்குவாத அரசியல்வாதி. அமெரிக்காவில் இருக்கக் கூடிய வெளிவிவகார கொள்கை விசேடமாக மத்திய கிழக்கு தொடர்பாக இருக்கக் கூடிய வெளிவிவகாரக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து அமெரிக்காவுக்குள்ளேயே தனக்கு எதிரான கருத்துகள் வந்தாலும் கூட தனது மனச்சாட்சிக்கு சரியாகப் படுவதற்கு துணிந்து நிற்கின்ற ஒரு பெண்மணியாக புகழ்பெற்ற அம்மையார்.

‘டொண் டேவிஸ்’ தமிழர் விவகாரங்களில் கணிசமான அக்கறை செலுத்திவருபவர். டொண் டேவிஸ் அண்மையில் காங்கிரஸ் சபையில் பேசியபொழுது ‘தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும். அதுதான் தீர்வுக்கு வழிவகுக்கக் கூடிய  ஒரேயோரு விடயம்’ என்ற அடிப்படையில் பேசியிருந்தமையானது மிகமிக முக்கியமான விடயமாகும். அவரது பங்களிப்பு தமிழ்த் தேசத்துக்கு மிகமிக முக்கியமானதாகும். அமெரிக்க சரித்திரத்திலேயே ஒரு மிக முக்கியமான கொள்கையை நிலைநாட்டி ஈழத்தமிழர்களுடைய உரிமை சார்ந்த குரலை எழுப்பியிருந்தவராவார்.  அத்தோடு தமிழ் மக்களுடைய பொறுப்புக் கூறலுக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டும் தான் பொருத்தமானது என்ற விடயத்திலும் மிகத் தீவிரமாக உழைக்க முன்வந்திருப்பவராவார். எதிர்காலத்தில் காங்கிரஸ் சபையில் இது தொடர்பான தீர்மானங்களைக் கொண்டுவருவதற்கும் நிறைவேற்றுவதற்கும் இவரது பங்களிப்பு மிகமிக அவசியமானதாகும். 

மூன்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடமும் கஜேந்திரகுமார்_பொன்னம்பலம்_வலியுறுத்திய_விடயங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில் –  

இன்றைய பூகோள அரசியல் காரணமாக இலங்கைத் தீவை மையப்படுத்திய போட்டித்தன்மையிலே சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பார்வையிலே அமெரிக்காவுடைய நிர்வாகம் இயங்குவதாக நாங்கள் கருதுகின்றோம். அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க மேற்கத்தேய நாடுகளுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் சார்பான ஒரு நபராக கருதப்படுகின்றதனாலும் இந்த வருடம் ஒரு தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினாலும் ரணில் விக்கிரமசிங்க இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கடுமையான மனித உரிமை மீறல்கள் – சட்டத்தின் ஆட்சி போன்ற ஜனநாயகத்துக்கு முக்கியமான தூண்களாக இருக்கக் கூடிய கொள்கைகள் அனைத்தையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிக மோசமான கொடூரமான சட்டங்களையெல்லாம் கொண்டுவந்து நிறைவேற்றுகின்றார். 

அந்த வகையில் நிகழ்நிலைக் காப்பு சட்டம் – வரவிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – அதே போன்று நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் நிரந்தரமாக முடக்குவதற்குரிய உள்ளுர் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இனிவரப்போகும் உண்மை மற்றும் நல்லிணக்கம் குறித்த சட்ட விடயங்களையும் அவரச அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றி – தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை அதிகரித்து – சிங்கள பௌத்த இனவாத சக்திகள் மட்டத்தில் தன்னுடைய செல்வாக்கை வளர்த்தெடுத்து – ராஜபக்ஸ தரப்புக்கு கடந்த காலங்களிலே வாக்களித்த மக்களுடைய வாக்கு வங்கியை முழுமையாக கைப்பற்றி ஆட்சிக்கு வருவதற்கு முனைப்பு காட்டி வருகின்றார். 

பூகோள அரசியல் காரணங்களுக்காக ரணில் விக்கிரமசிங்க மேற்கு சார்ந்த இந்தியா சார்ந்த ஒரு விசுவாசியாக இருப்பதால் – அமெரிக்க இராஜாங்க திணைக்களம் – மற்றும் அரசு என்பன ரணில் விக்கிரமசிங்க பாரதூரமான மனித உரிமை மீறல்கள் – ஜனநாயக விரோத செயற்பாடுகளை செய்கின்ற போதும். பெருமளவில் அதனை எதிர்க்காமல் கடமைக்கு மட்டும் கருத்துக்களை தெரிவிப்பதுடன் அமைதியாக இருக்கின்ற தன்மை காணப்படுகின்றது. 

ஆகவே இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு செனட் சபையில் இருக்கக் கூடிய உறுப்பினர்களும் கீழ் சபையில் இருக்கக் கூடிய காங்கிரஸ் உறுப்பினர்களும் தமது குரலை எழுப்பி அழுத்தங்களை உருவாக்கவேண்டும். அவ்வாறன்றி இந்த நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது கடினமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் – இன்று பொருளாதார ரீதியாக முழுமையாக இலங்கை மேற்கத்தைய நாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்கும் போது – அதுவும் விசேடமாக முதலீடுகள் எனப் பார்க்கின்றபோது – மேற்கத்தைய நாடுகளின் ஒத்துழைப்பில்லாமல் அந்த முதலீடுகள் வரப்போவதில்லை என்கின்ற ஒரு நிலையில் – உதவி செய்வதற்கான நிபந்தனைகளைப் விதித்து பேரம்பேசக்கூடிய நிலைமை மேற்கு நாடுகளுக்கு இருக்கும் நிலையில் –  அதனைச் செய்யாமல் செயற்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கின்றது.

ஆகவே இப்படிப்பட்ட விடயங்களுக்கு அமெரிக்காவில் இருக்கக் கூடிய நிர்வாகத்துக்கு முற்போக்குவாத சிந்தனையோடு செயற்படுகின்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ற வகையில் இதில் கூடிய அக்கறை காட்ட வேண்டும். என்பதுடன் – மிக அவசரமாக செய்யவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். 

அத்தோடு  –  எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய – தமிழ்த் தேசத்தினுமைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக வலியுறுத்தி அமெரிக்க அரசு அங்கீகரிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் – பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் முழுமையான சர்வதேச விசாரணையை நிலை நாட்டுவதற்கு நேரடியாக குற்றவியல் நீதிமன்றம் போன்ற விடயங்களை வலியுறுத்தி பொறுப்புக்கூறல் சம்பந்தமாக மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம் – என்றார்.

Tags: அமெரிக்கஇலங்கைஉறுப்பினர்களைஎம்.பிஏனையவைகஜேந்திரகுமார்காங்கிரஸ்சந்தித்தசெய்திகள்யாழ்
Thinakaran

Thinakaran

Related Posts

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

by Mathavi
May 24, 2025
0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று நேற்று மாலை கடுமையான காற்றினால்...

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 24, 2025
0

நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று அதிகாலை( 24) நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் உள்ள டொப் பாஸ் (Top Pass)...

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 23, 2025
0

பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சங்கானை பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணகுமார் (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின்...

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 23, 2025
0

யாழில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

by Thamil
May 23, 2025
0

ஐஸ், கேரளா கஞ்சா, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போன்ற போதைப்பொருட்களுடன் 42 பேர் காத்தான்குடி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்....

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

அம்பாறை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை நகரில் இன்று (23) 40 கொகைன் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் நடமாடிய சந்தேக நபரை...

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

by Thamil
May 23, 2025
0

அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக...

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

by Thamil
May 23, 2025
0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியதையடுத்து தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம்...

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் இன்றைய தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின்...

Load More
Next Post

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி ஆலய இரதோற்சவம்.!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கிழக்கு முனைய அபிவிருத்திக்கான இயந்திரங்கள்.!

இறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி ஆளுநரை சந்தித்த மீனவர்கள்.!

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி